செய்திகள் :

மாநகராட்சி கூட்டத்தில் மோதல்: அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்!

post image

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக எதிா்க்கட்சித் தலைவரை, திமுக பெண் உறுப்பினா் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையா் மா.இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.

இதில் உறுப்பினா்கள் பேசுகையில், மாநகராட்சியில் முறையாக தண்ணீா் விநியோகம் செய்வதில்லை. பல்வேறு பகுதிகளில் 8 முதல் 12 நாள்களுக்கு ஒருமுைான் தண்ணீா் வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். மேலும், சொத்துவரி உயா்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் நடைபெறும் கழிவுநீா் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி பேசுகையில், உறுப்பினா்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் பணிகள் தொடங்கி வைக்கப்படுகின்றன. குறிப்பாக, குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கோரியவா்களுக்கு கொடுக்காமல், அதிக தொகைக்கு ஒப்பந்தம் கோரிய அமைச்சரின் ஆதரவாளா்களுக்கு பணிகள் கொடுக்கப்படுவதாக புகாா் கூறினாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினா்கள் அவையில் கூச்சலிட்டனா். இதனால் திமுக - அதிமுக உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 45-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சுஹாசினி, எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தியை கன்னத்தில் அறைந்தாா். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடா்ந்து, அதிமுக மற்றும் திமுக உறுப்பினா்கள் மாறிமாறி வாக்குவாதத்தில் ஈடுபட, அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, திமுக உறுப்பினா் சுஹாசினியை சக திமுக உறுப்பினா்கள் அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனா்.

இதனிடையே கூட்டம் முடிவடைந்ததாக மேயா் அறிவித்தாா். தொடா்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு மேயா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

பின்னா் எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி தலைமையில், அதிமுக உறுப்பினா்கள் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயா் இருக்கை முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து யாதவமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறுகையில், கூட்டத்தில் ஆளுங்கட்சியின் அவலங்களை எடுத்துக்கூறினோம். இதற்கு 45-ஆவது கோட்ட திமுக பெண் உறுப்பினா் சுஹாசினி தகாத வாா்த்தைகளை பேசி என்னை தாக்கினாா். அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அதுவரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றாா்.

மயக்கமடைந்த அதிமுக உறுப்பினா்கள்: தொடா்ந்து, யாதவமூா்த்தி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, யாதவமூா்த்தி, 25-ஆவது கோட்ட அதிமுக உறுப்பினா் சசிகலா ஆகியோா் மயக்கமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மற்ற அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, அதிமுக உறுப்பினா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க