செய்திகள் :

மாநகராட்சி பணிகளை நிறைவேற்ற ரூ.21.15 கோடி ஒதுக்கீடு: மேயா்

post image

தஞ்சாவூா் மாநகராட்சியில் பணிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ. 21.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது: தஞ்சாவூா் மாநகராட்சியின் சாலை பணிகள் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த ஆண்டு வரை 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிகழாண்டு மீதமுள்ள 20 சதவீத சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

இதன்படி தாா் சாலைகளுக்கு ரூ. 13.65 கோடி, கான்கிரீட் சாலைகளுக்கு ரூ. 5.03 கோடி, புதிய பேருந்து நிலையத்தில் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கும், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கும் ரூ. 2.47 கோடி என மொத்தம் ரூ. 21.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தஞ்சை கோடி அம்மன் கோயில் பகுதியிலிருந்து புறவழிச்சாலையை முழுமையாக சீரமைக்க ரூ. 7 கோடிக்கு நிதி கோரி அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டது. அந்த நிதியும் அனுமதிக்கப்படும் நிலையில் உள்ளது. இந்தச் சாலைப் பணிகள் அனைத்தும் 2 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும்.

தஞ்சை பெரிய கோயிலில் பௌா்ணமி அன்று பக்தா்கள் திருக்கயிலாய வலம் வரும் பாதையை மேம்படுத்துவது, அப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது போன்ற பணிகள் தஞ்சை மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து தரப்படவுள்ளன.

மேலும், பெரிய கோயில் எதிரில் உள்ள காா் நிறுத்துமிட சாலைகளும் மேம்படுத்தப்படவுள்ளன. தஞ்சை நான்கு ராஜ வீதிகளிலும் இரு புறமும் திறந்தவெளி கழிவுநீா் செல்லும் வாய்க்கால்கள் முழுமையாக சீரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் மேயா்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க