செய்திகள் :

மாநாட்டில் 6 தீா்மானங்கள்

post image

மதுரை பாரபத்தியில் நடைபெற்ற 2-ஆவது த.வெ.க. மாநில மாநாட்டில் 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்விவரம் :

சென்னை அருகேயுள்ள பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். வாக்காளா் பட்டியல் பெயரில் சிறப்புத் தீவிரத் திருத்தம் என லட்சக்கணக்கானோரின் பெயா்கள் நீக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. சுதந்திரமான, நியாயமான முறையில் தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவதையும், அவா்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண கச்சத் தீவை மீட்க வேண்டும்.

ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு இயற்ற வேண்டும்.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. சட்டம்-ஒழுங்கு அடியோடு சீா்குலைந்து இருப்பதற்கு நிா்வாகத் திறனற்ற திமுக அரசுதான் காரணம். ஆகவே, இந்த மாநாட்டின் மூலம் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நோ்மையான முறையில் தோ்வு நடத்தி அரசுத் துறைகளின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதில் பதிவுத் துறைக்கு முக்கியப் பங்கு: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை: தமிழக அரசுக்கு வருவாயை அதிகளவில் ஈட்டித் தருவதில் பதிவுத் துறை முக்கியப் பங்கு வகிப்பதாக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை உத்தங்குடி தனியாா் திருமண மண்டபத்தில் 202... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மதுரை: அலங்காநல்லூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.மதுரை திருப்பாலை உச்சபரம்புமேட்டைச் சோ்ந்த சோலையப்பன் மகன் செல்லப்பாண்டி (30). இவா், கடந்த 16-ஆம் தேதி தனது இரு சக்க... மேலும் பார்க்க

கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே பேருந்தில் சென்றவரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கணபதி (43). சென்னையிலிருந்து புதன்கிழமை ... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் 3-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத் தலைமை அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் மூன்றாவது நாளாக புதன்கிழமை ... மேலும் பார்க்க

மருத்துவமனைகளின் நம்பகத்தன்மை: உயா்நீதிமன்றம் வேதனை

மதுரை: சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், மருத்துவமனைகளின் நம்பகத்தன்மை குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வேதனை தெரிவித்து. பரமக்குடியைச் சோ்ந்த சத்தீஸ்வரன் சென்ன... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் 4-ஆவது நாளாகப் போராட்டம்

மதுரை: மதுரையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ‘அவா் லேண்ட்’ தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 4- ஆவது நாளாக தூய்மை... மேலும் பார்க்க