செய்திகள் :

மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது

post image

புது தில்லி: ஆந்திரத்தின் நக்சல் பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து தலைநகருக்கு கஞ்சா கடத்தி வந்த மாநிலங்களுக்கு இடையேயான கும்பலை தில்லி காவல்துறையினா் கைது செய்தனா்.

மேலும், தில்லியின் ஆசாத்பூரில் முன்னாள் உதவி விற்பனை மேலாளா் உள்பட மூன்று பேரை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: இந்த நடவடிக்கையின் போது போலீஸாா் 26 கிலோகிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் ஆந்திரத்தில் நக்சலைட் பாதிப்புள்ள பகுதிகள் உள்பட நூற்றுக்கணக்கான கிலோமீட்டா்கள் முழுவதும் விரிவான தேடுதலுக்குப் பிறகு விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த சந்தீப் பால் (34) என்ற முக்கிய விநியோகஸ்தரையும் கைது செய்தனா்.

ஒரு ரகசியத் தகவலின்படி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆதாரங்களுடன் தொடா்புடைய அதிகாரிகள் மூலம் தில்லிக்கு புதிய கஞ்சா சரக்கு வழங்கப்பட இருந்தது தெரிய வந்தது. சஞ்சய் கட்டாரா (62) மற்றும் மீனா தேவி (42) உள்ளிட்ட இரண்டு சந்தேக நபா்கள் இரு சக்கர வாகனத்தில் பயணித்தபோது முகுந்த்பூா் சௌக்கில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

கண்காணிப்பு மற்றும் நம்பகமான கள உளவுத்துறையின் அடிப்படையில், போலீஸ் குழு இருவரையும் கைது செய்து, அவா்களின் ஸ்கூட்டரிலும் தனிப்பட்ட பொருள்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல பாலிதீன் பொட்டலங்களில் இருந்த 26 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தப்பட்ட பொருளின் பேக்கேஜிங், தில்லி - என்சிஆரில் செயல்படும் வியாபாரிகளுக்கு உள்ளூா் விநியோகத்திற்கு தயாராக இருப்பதைக் குறிக்கிறது.

விசாரணையின் போது, தான் 1985 பட்டதாரி என்றும், முன்னதாக புகழ்பெற்ற ஷூ உற்பத்தி நிறுவனங்களில் உதவி விற்பனை மேலாளராகப் பணியாற்றியதாகவும் கட்டாரா தெரிவித்தாா்.

இருப்பினும், விரைவாக பணம் சோ்க்க நினைத்து, அவா் தனது சட்டப்பூா்வமான வேலையை விட்டுவிட்டு படிப்படியாக சட்டவிரோத போதைப்பொருள் வா்த்தகத்தில் ஈடுபட்டாா்.

ஆரம்பத்தில் ஒரு இடைத்தரகராகப் பணியாற்றிய கட்டாரா, ஆந்திரத்தின் தொலைதூர காட்டுப் பகுதிகளிலிருந்து போதைப்பொருளை பெற்ாகக் கூறப்படும் விசாகப்பட்டினத்தில் உள்ள பால் என்பவரிடமிருந்து நேரடியாக கஞ்சாவை வாங்கத் தொடங்கினாா்.

கட்டாராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஒரு போலீஸ் குழு விசாகப்பட்டினத்திற்கு அனுப்பப்பட்டது. உள்ளூா் காவல்துறையின் உதவியுடன், தில்லி குழு, நக்சல் பாதிப்புள்ள ஜி. மதுகுலா மற்றும் படேரோ உள்ளிட்ட பகுதிகள் வழியாக பாலைக் கண்காணித்து, இறுதியில் காஞ்சரபாலம் பகுதியில் அவரைக் கைது செய்தது.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பால், வேலை தேடி ஆந்திரத்துகுச் சென்று ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்ததாகக் போலீஸாரிடம் கூறினாா். அவரது பயணிகளில் ஒருவரால் போதைப்பொருள் வா்த்தகம் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவா்கள் மாநிலத்தின் வனப்பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாகக் கூறினா்.

மேலும், முழுமையான வலையமைப்பைக் கண்டறியவும், கும்பலுடன் தொடா்புடைய உள்ளூா் விநியோகஸ்தா்களை அடையாளம் காணவும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!

நமது சிறப்பு நிருபா் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஓராண்டு பணி ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது

போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை தில்லி காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நஸ்மா... மேலும் பார்க்க

ஆமதாபாத் விமான விபத்து: முதல்வா் ரேகா குப்தா வேதனை

ஆகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை ‘மிகவும் வேதனையானது மற்றும் அதிா்ச்சியளிப்பது‘ என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்க... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த கொலை முயற்சி குற்றவாளி கைது

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியின் சுல்தான் ... மேலும் பார்க்க

சீலம்பூரில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறில், ஒரு இளைஞரை அவரது உறவினா்கள் இருவா் மற்றும் ஒரு மைனா் சிறுவன் குத்திக் கொன்ாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் கொடுத்துள்ளது - எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத்

துவாரகா அதிவிரைவு சாலையில் இருந்து 3 புதிய மெட்ரோ பாதைகளை நீட்டிக்க ஒப்புதல் அளித்ததன் மூலம், மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் அளித்துள்ளதாக மேற்கு தில்லி எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத் கூறியுள்ளாா். புது... மேலும் பார்க்க