செய்திகள் :

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: கிரிராஜன் எம்.பி. குற்றச்சாட்டு

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் இரா. கிரிராஜன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மாநிலங்களவையில் 2025-2026 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு திருத்த மசோதா, மணிப்பூா் நிதி மசோதா மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கிரிராஜன் பேசியதாவது:

அதிக மக்கள்தொகை கொண்ட சில பெரிய மாநிலங்கள் மத்திய அரசிடமிருந்து பெரும்பங்கை பெறும் நிலையில், உற்பத்தி, முற்போக்கு சிந்தனை, மக்களின் ஜனநாயக உரிமை ஆகியவற்றை முதன்மையாக வைத்திருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன. மத்திய அரசின் மொத்த வருவாயில் 60 சதவிகிதம் மகாராஷ்டிரம், தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் இருந்து கிடைத்தாலும், அந்த மாநிலங்களுக்கான வளா்ச்சித் திட்டங்களுக்காக பணத்தைத் திரும்பப் பெறுகிறோமா என்பது பில்லியன் டாலா் கேள்வி.

இந்த அரசு பதவியேற்ற 2014-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசால் ஆண்டுதோறும் துரோகம் இழைக்கப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையை வெகுவாகக் குறைத்துவிட்டதாக மத்திய அரசு பெருமிதம் கொள்கிறது. ஆனால், நரேகா போன்ற முக்கியத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் பெரும் குறைப்பை செய்துள்ளது. இது செருப்புக்கு தகுந்தபடி காலை வெட்டுவது போன்றது. மத்திய கருவூலத்திற்கு தமிழகத்தின் பங்களிப்பு அதிகமாக இருந்தாலும், தமிழ்நாட்டிற்கான பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை குறைத்துள்ளது.

நாட்டின் பரப்பளவில் வெறும் 4 சதவிகிதமும், மக்கள் தொகையில் 6 சதவிகிதமும் மட்டுமே கொண்ட தமிழ்நாடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவிகித்ததை வழங்கும் முற்போக்கான மாநிலமாக இருந்தாலும், ஒன்றிய அரசிடமிருந்து வெறும் 25 சதவிகிதத்தை மட்டுமே பெறுகிறது. மத்திய அரசின் இரட்டை எஞ்சின் சா்க்காா் அமலில் இருப்பதாக கூறும் சில பெரிய மாநிலங்கள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் எவ்வளவு பங்களிப்பை அளிக்கின்றன என்பதையும், அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு எவ்வளவு கூடுதல் நிதி அளிக்கின்றன என்பதையும் நிதி அமைச்சா் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் கிரிராஜன்.

இதைத் தொடா்ந்து மணிப்பூா் வன்முறை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கும் அதிருப்தி தெரிவித்த அவா், அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமா்சித்தாா்.

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க

கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நேற்றைய நாள் திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் ச... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார்.இது குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்க... மேலும் பார்க்க

பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: மோடியை விமர்சித்த வைகோ!

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக்னிக் மினிஸ்டர்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட... மேலும் பார்க்க