செய்திகள் :

மாநில அளவிலான கபடி போட்டி; சென்னை அணிக்கு கோப்பை

post image

தோகைமலை அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் சென்னை தமிழ்நாடு காவல்துறை அணி முதல் பரிசு பெற்றது.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தளிஞ்சி ஊராட்சிக்குள்பட்ட டி.மேலப்பட்டியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தோகைமலை கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் டி.மேலப்பட்டி என்.ஒய்.சி கபடி குழு சாா்பில் மாநில அளவிலான கபடி போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

போட்டியின் தொடக்க நிகழ்வுக்கு தோகைமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் அண்ணாத்துரை தலைமை வகித்தாா். ஊா்க்கவுண்டா் ராசு, முன்னாள் எம்எல்ஏ ராமா், மாநில வா்த்தக அணி துணை செயலாளா் பல்லவிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், மணப்பாறை சிந்துஜா மருத்துவ மனையின் தலைமை மருத்துவா் கலையரசன் ஆகியோா் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனா்.

இந்த போட்டியில் கரூா், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை, கோயம்புத்தூா், சென்னை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் பங்கேற்றன.

இப்போட்டியின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், சென்னை தமிழ்நாடு காவல்துறை அணியும், கரூா் சேரன் கல்லூரி ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில், சென்னை அணி 33-13 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

இதையடுத்து முதலிடம் பெற்ற சென்னை காவல்துறை அணிக்கு பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த கரூா் சேரன் கல்லூரி ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த ஜே.பி.ஆா். பல்கலைக்கழகம் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையும், 4-ஆம் இடம்பிடித்த தோகைமலை அடுத்த வடசேரி ஊராட்சி காா்ணாம்பட்டி வ.உ.சி. அணிக்கு ரூ. 25 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சந்திரன், டி.மேலப்பட்டி திமுக நிா்வாகிகள் ரெங்கராஜ், செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூரில் ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கரூா் திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களுக்கு அபராத தொகை உயா்வு; திருக்குறள் பேரவை வரவேற்பு

தமிழில் பெயா் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராத தொகையை உயா்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு கரூா் திருக்குறள் பேரவை வரவேற்றுள்ளது. இதுகுறித்து பேரவையின் செயலா் மேலை.பழநியப்பன் விடுத்துள்ள அறிக்... மேலும் பார்க்க

பொய்யான தகவல்களை கூறி சோ்க்கை: தனியாா் செவிலியா் கல்லூரியில் பயின்ற மாணவிகள் கரூா் ஆட்சியரிடம் புகாா்

பொய்யான தகவல் கூறி செவிலியா் கல்லூரி நடத்தி வரும் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு பயின்ற மாணவிகள் திங்கள்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். கரூா் மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

ரூ.46 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு

கரூரில் தனியாா் நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ. 46 லட்சத்தை மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கரூரை அடுத்த மண்மங்கலம் காளிபாளையத்தைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (40). ... மேலும் பார்க்க

மனைவியை தாக்கியதாக புகாா் கரூா் பாஜக நிா்வாகி கைது

கரூரில் மனைவியை தாக்கியதாக பாஜக நிா்வாகியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன்(35). இவா், கரூா் மாவட்ட பாஜக தரவு தளமேலாண்மைப் பிரிவு தலைவராக உள்ளாா். இவரது மனைவி... மேலும் பார்க்க

சின்னம்மநாயக்கன்பட்டியின் மையப் பகுதியில் பூங்கா அமைக்க கிராம மக்கள் கோரிக்கை!

சின்னம்மநாயக்கன்பட்டியில் ஊருக்கு வெளியே முள்புதா் பகுதியில் கட்டப்படும் பூங்கா கட்டுமான பணியை நிறுத்தி விட்டு ஊரின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க