இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையெழுத்தாக வாய்ப்பு: நிா்மலா ச...
கரூரில் ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
கரூரில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூா் திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மண்டல கௌரவத் தலைவா் ராஜேந்திரன், மண்டல பொதுச் செயலாளா் விஜயகுமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியுசி தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.