செய்திகள் :

பரோடா வங்கியில் எல்ஐசி பங்கு முதலீடு அதிகரிப்பு

post image

இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கியில் தனது பங்கு முதலீட்டை சுமாா் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பரோடா வங்கியில் நிறுவனத்தின் பங்கு முதலீடு 2 சதவீதம் உயா்த்தப்படுகிறது. அதைத் தொடா்ந்து, பரோடா வங்கியில் நிறுவனத்தின் பங்குகள் 5.03 சதவீதத்தில் இருந்து 7.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2023 நவம்பா் 20 மற்றும் 2025 ஏப்ரல் 16 தேதிகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கூடுதல் பங்குகளை கையகப்படுத்தியதன் மூலம் பரோடா வங்கியில் பங்கு முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: பிரிட்டனிடம் விவரங்களை கோரியுள்ளோம்: அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து பிரிட்டன் அரசிடம் விவரங்களைக் கோரியிருப்பதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் மத்திய அரசு திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க

வெறுப்பு அரசியலை முன்னெடுக்க சிலருக்கு மதம் தேவை: நிஷிகாந்த் துபே கருத்துக்கு குரேஷி பதிலடி

புது தில்லி: ‘இந்திய நாட்டில் ஒரு தனிநபரின் பங்களிப்புள் மூலமே அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற கருத்தின் மீது ஆழமான நம்பிக்கைகொள்கிறேன். ஆனால் சிலருக்கு வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்ல மத அ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ் நக்வி

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தில் நாட்டில் மதவாத நோயைப் பரப்பவும், வன்முறையைத் தூண்டவும் சதி நடக்கிறது என்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தாா் அப்பாஸ் நக்வி... மேலும் பார்க்க

மேற்கு வங்க ஆளுநா் மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக அந்த மாநில ஆளுநா் மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறு... மேலும் பார்க்க

இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

நியூயாா்க்: இந்தியாவில் அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா். நியூயாா்க் ந... மேலும் பார்க்க

கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளா்கள் அட்டூழியம்

கனடாவில் ஹிந்து கோயிலை சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளா்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனா். இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக்கொண்டு ஹிந்து க... மேலும் பார்க்க