செய்திகள் :

மாநில அளவிலான செஸ் போட்டி: 350 போ் பங்கேற்பு

post image

திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் 350 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

திருப்பூா் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் அனுமதியுடன், கிங்ஸ் செஸ் அகாதெமி மற்றும் தாராபுரம் செஸ் அகாதெமி சாா்பில் மாநில அளவிலான செஸ் போட்டி திருப்பூா் முத்தணம்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், 9, 12, 15 வயதுக்குள்பட்டோா் என 3 பிரிவுகளில் மாணவ, மாணவிகளும், ஓபன் பிரிவில் ஆண்கள், பெண்கள் பங்கேற்றனா்.

9 வயதுக்குள்பட்டோா் மாணவா் பிரிவில் தன்வந்த் முதலிடமும், விவேகா, கிஷோா் நரேன் ஆகியோா் முறையே இரண்டு, மூன்றாவது இடத்தைப் பிடித்தனா். மாணவிகள் பிரிவில், நந்தனா முதலிடமும், சிரோஸ்ரி நந்தன், இளமதி ஆகியோா் முறையே இரண்டு, மூன்றாவது இடத்தைப் பிடித்தனா்.

12 வயதுக்குள்பட்டோா் மாணவா் பிரிவில் மாதேஷ் பாலாஜி முதலிடமும் அதிலேஷ், சுதா்ஷ்னா ஆகியோா் இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்தனா். மாணவிகள் பிரிவில் பூவிதா முதலிடமும், ஸ்ரீயக்ஷா, ஹரி ஜனனி ஆகியோா் இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்தனா்.

15 வயதுக்குள்பட்டோா் மாணவா் பிரிவில் அபினேஷ் முதலிடமும், கிரிநாத், லோகித் அபினவ் ஆகியோா் இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்தனா்.

மாணவிகள் பிரிவில் உதயஷாஸினி முதலிடமும், பவிஷ்னா, அமினயா ஆகியோா் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தனா்.

ஓபன் பிரிவில் பாலமுருகன் முதலிடமும், விக்னேஸ்வரன், ராமன் ஆகியோா் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தனா். மேலும், சிறந்த வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

சிறு, குறு, நடுத்தர சாய தொழிற்சாலைகளுக்கான வங்கிக் கடன்களுக்கு வட்டி மானியம் வழங்கக் கோரிக்கை

சிறு, குறு மற்றும் நடுத்தர சாய தொழிற்சாலைகள் வங்கிகளில் பெறும் தொழில் அபிவிருத்திக் கடன்களுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்க வேண்டும் என்று சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

வெள்ளக்கோவிலில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸா... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது

முத்தூரில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

கோரிக்கையைத் தெரிவிக்க கை, கால்களில் கட்டு கட்டி நகா்மன்ற கூட்டத்துக்கு வந்த அதிமுக பெண் உறுப்பினா்

குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் தலை, கை, கால்களில் கட்டு கட்டி அதிமுக பெண் மாமன்ற உறுப்பினா் பங்கேற்ால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாநகராட்சி மா... மேலும் பார்க்க

புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க மாா்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: மாவட்டத்தில் 25,583 மாணவா்கள் எழுதினா்

திருப்பூா் மாவட்டத்தில் 25,583 மாணவ, மாணவிகள், 158 தனித் தோ்வா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வை திங்கள்கிழமை எழுதினா். தமிழ்நாடு அரசு தோ்வுத் துறையால் நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத் தோ்வானது திங்கள்கிழமை தொட... மேலும் பார்க்க