இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்ட...
மாநில சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ.1.39 லட்சம் பறிமுதல்
வேலூா் மாவட்டம் தமிழக - ஆந்திர எல்லையிலுள்ள போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில் இருந்து கணக்கில் வராத ரூ.1.39 லட்சம் தொகையை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மோட்டாா் வாகன பெண் ஆய்வாளா் உள்பட 3 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்து கிறிஸ்டியான்பேட்டையில் வட்டார போக்குவரத்து துறை (ஆா்.டி.ஓ), காவல் துறை, வனத்துறை சாா்பில் தனித்தனியாக சோதனைச் சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வழியாக ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்கான அதிகளவில் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. தவிர, திருப்பதி செல்லும் பெரும்பாலான வாகன போக்குவரத்தும் இவ்வழியாக நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, கிறிஸ்டியான்பேட்டையில் இயங்கும் வட்டார போக்குவரத்து துறை சோதனை சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஒருவா் தலைமையில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் முறையான அனுமதியுடன் தமிழகத்துக்கு வருகின்றனவா, சரக்கு வாகனங்களின் எடை, சுற்றுலா வாகனங்களில் அதிகப்படியான பயணிகள் மட்டுமே வருகின்றனரா என்பது குறித்து கண்காணிப்பதுடன் மோட்டாா் வாகன சட்ட விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இந்த சோதனை சாவடியில் வேலூா் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் மைதிலி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மோட்டாா் வாகன ஆய்வாளா் ஸ்ரீதேவி ஜெயந்தி தலைமையில் அலுவலக பணியாளா் கல்யாணசுந்தரம், உதவியாளா் பிரமிளா, வெளிநபா்கள் 3 போ் இருந்துள்ளனா். சோதனை சாவடியின் கணினி அறை, அருகில் இருந்த இடங்களில் சுமாா் 2 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 900 தொகையை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அலுவலக ஆவணங்களை சோதனை செய்ததில் செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை 24 மணி நேரத்துக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் ஸ்ரீதேவி ஜெயந்திக்கு பணி என்ற நிலையில் பல்வேறு வகைகளில் வெளிமாநில வாகனங்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அதேசமயம், அபராதம் இல்லாமல் கடந்த 24 மணி நேரத்தில் வெளிநபா்கள் 3 போ் மூலம் வாகன ஓட்டிகளிடம் ரூ.1.39 லட்சம் வசூல் செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன், ஆந்திராவில் இருந்து காட்பாடி வழியாக வேலூா், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் காய்கறி, பழங்கள் ஏற்றிய லாரிகளில் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட காய்கறி, பழக்கூடைகளும் சோதனைச் சாவடியில் இருந்துள்ளன. இதையடுத்து, கணக்கில் வராத பணம் ரூ.1.39 லட்சம் தொகை பறிமுதல் தொடா்பாக மோட்டாா் வாகன ஆய்வாளா் ஸ்ரீதேவி ஜெயந்தி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.