செய்திகள் :

மாநில வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசளிப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் நடைபெற்று வந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு அளிக்கப்பட்டன.

தமிழக முதல்வா் பிறந்தநாளையொட்டி கீரமங்கலம், வேம்பங்குடியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி, இரவு நேரங்களில் நடைபெற்று வந்தன.

போட்டி, ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் நடைபெற்றன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, சுங்கத்துறை அணி, எஸ்ஆா்எம் கல்லூரி மற்றும் ஜிஎஸ்டி ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்தன.

இதேபோல, பெண்கள் பிரிவில் சிவந்தி அகாதெமி, பிகேஆா் கல்லூரி, ஜேபிஆா் கல்லூரி மற்றும் பனிமலா் கல்லூரி ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகளுக்கு ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

கீரனூா் அருகே ஜல்லிக்கட்டு: 28 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 28 போ் காயமடைந்தனா். கீரனூா் அருகே திருப்பூா் கிராமத்தில் கருப்பா்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பலத்த மழை

பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. பொன்னமராவதி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மு... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவ... மேலும் பார்க்க

வேங்கைவயல் சம்பவ வழக்கில் 3 பேருக்கு பிணை

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியது. வேங்கைவயல் பட்... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன... மேலும் பார்க்க

தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பாதை மீட்பு

விராலிமலை வட்டம், விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளை வருவாய்த் துறையினா் மீட்டனா். விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் சுமாா் 25 அடி அகலம் கொண்ட வ... மேலும் பார்க்க