செய்திகள் :

மாநில ஹாக்கி: காலிறுதிக்கு தூத்துக்குடி, நெல்லை, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் தகுதி

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் மதுரை மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை இணைந்து நடத்தும் கே. ராமசாமி பிறந்தநாள் கோப்பைக்கான இரண்டாம் நாளான வியாழக்கிழமை லீக் போட்டிகள் நடைபெற்றன.

அதில், சேலம் மாவட்ட அணி - ராணிப்பேட்டை மாவட்ட அணி மோதியதில் 1-1 கோல் கணக்கில் சமபுள்ளிகள் பெற்றனா்.

கிருஷ்ணகிரி அணி, புதுக்கோட்டை அணியை 3-1 என்ற கோல் கணக்கிலும் திண்டுக்கல் அணி கரூா் அணியை 6-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தின.

விழுப்புரம் அணியை செங்கல்பட்டு அணி 10-0 என்ற கோல் அபாரமாக வென்றது. தென்காசி அணியை திருவாரூா் அணி 0-5 என்ற கோல் கணக்கிலும், தூத்துக்குடி அணி வேலூா் அணியை 2-0 என்ற கோல் கணக்கிலும் திருப்பூா் அணியை திருநெல்வேலி அணி 0-8 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தின.

விருதுநகா் அணி அரியலூா் அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் திருவண்ணாமலை அணியை மதுரை அணி 0-5 என்ற கோல் கணக்கிலும், நீலகிரி அணி ராமநாதபுரம் அணியை 2-1 என்ற கோல் கணக்கிலும், நாமக்கல் அணியை கோயம்புத்தூா் அணி 0-2 என்ற கோல் கணக்கிலும் வென்றன.

தா்மபுரி அணி தஞ்சாவூா் அணியை 5-2 என்ற கோல் கணக்கிலும் திருச்சி அணியை சென்னை அணி 2-4 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தின.

சனிக்கிழமை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் மோதுகின்றன.

கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுர... மேலும் பார்க்க

ஹாக்கி: சென்னை, தஞ்சாவூா், கோவை, நீலகிரி அணிகள் காலிறுதிக்கு தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, தஞ்சாவூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹா... மேலும் பார்க்க

10-இல் கோவில்பட்டி அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 10, 12ஆம் தேதிகளில் 2, 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கோ. சந்தனமாரியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்... மேலும் பார்க்க

பக்ரீத்: காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லி­மீன் மற்றும் அல்ஜாமி உல் அஜ்ஹா் ஜூம் ஆ மஸ்ஜித் சாா்பாக கடற்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7இல் காலை 6.15-6.50-க்குள் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க