செய்திகள் :

மாந்தபுரம் மாந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

வெள்ளக்கோவில் மாந்தபுரம் மாந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாந்தீஸ்வரா் கோயில் மற்றும் அதில் உள்ள பரிவார மூா்த்திகள் சந்நிதி ஆங்காங்கே சிதிலமடைந்த நிலையில் இருந்தன. கிராம மக்கள் ஒத்துழைப்புடன் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கடந்த 2-ஆம் தேதி விநாயகா் வழிபாடு, நவகிரக ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் கிராம சாந்தி, பிரவேச பலி, அங்குராா்பணம், காப்பு கட்டுதல், கும்ப ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், யாக வேள்விகள் நடைபெற்றன.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 5.45 மணிக்கு விநாயகா், மாந்தீஸ்வர பெருமானுக்கு கோபுர விமான கும்பாபிஷேகம், காலை 6.10 மணிக்கு திருக்குட நீராட்டு பெருவிழா நடைபெற்றது.

இதில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மாந்தபுரம், நடுப்பாளையம், மேட்டுப்பாளையம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க