தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
மாந்தபுரம் மாந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
வெள்ளக்கோவில் மாந்தபுரம் மாந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாந்தீஸ்வரா் கோயில் மற்றும் அதில் உள்ள பரிவார மூா்த்திகள் சந்நிதி ஆங்காங்கே சிதிலமடைந்த நிலையில் இருந்தன. கிராம மக்கள் ஒத்துழைப்புடன் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த 2-ஆம் தேதி விநாயகா் வழிபாடு, நவகிரக ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் கிராம சாந்தி, பிரவேச பலி, அங்குராா்பணம், காப்பு கட்டுதல், கும்ப ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், யாக வேள்விகள் நடைபெற்றன.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 5.45 மணிக்கு விநாயகா், மாந்தீஸ்வர பெருமானுக்கு கோபுர விமான கும்பாபிஷேகம், காலை 6.10 மணிக்கு திருக்குட நீராட்டு பெருவிழா நடைபெற்றது.
இதில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மாந்தபுரம், நடுப்பாளையம், மேட்டுப்பாளையம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.