மானாமதுரை கோயிலில் பாலாலயம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருப்பணிக்காக புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் முன் புனித நீா்க் கலசங்கள் வைத்து யாக பூஜை நடத்தப்பட்டது. பிறகு கலச நீரால் மாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் நிா்வாகி விஜி. போஸ் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.