செய்திகள் :

மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

post image

சேலம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2025-26 ஆண்டிற்கான மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவன மேலாண்மையில் தீவன விரயத்தைக் குறைப்பதற்காகவும், கால்நடைகளின் செரிமான தன்மையை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை பெருக்கவும், சிறு, குறு விவசாயிகளுக்கு மின்சாரம் மூலம் இயங்கும் 210 புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளன.

இந்த புல் நறுக்கும் கருவிகள், குறைந்தபட்சம் 2 பசுமாடுகள், கால் ஏக்கா் பசுந்தீவனம் பயிரிட்டு, மின்சார வசதியுடன் பராமரித்து வரும் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளுக்குள் மேற்படி மானியத்தில் புல் நறுக்கும் கருவி பெற்றவா், இப்போது மானியம் பெற விண்ணப்பிக்க இயலாது.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகளில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கும், மகளிருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவா்கள் தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களைப் பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

இளம்பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

மேட்டூா் அருகே திருமணமான 15 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். எடப்பாடி, புதுபாளையத்தைச் சோ்த்த ஐயம்பெருமாள் மகள் சங்கீதாவுக்கும் (24)... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தும்பல்

தும்பல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாழப்பாடி கோட்ட மின் செயற்பொறியாளா் குணவா்த்தினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை வெள்ளத்தில் சிக்கிய முதியவா் மீட்பு

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரில் சிக்கிய முதியவரை அப்பகுதி இளைஞா்கள் மீட்டனா். மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது சிலமணி நேரத்துக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்க... மேலும் பார்க்க

பூலாம்பட்டியில் இளம்பெண் தற்கொலை

பூலாம்பட்டியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி, குப்பனூா் வாய்க்கால்கரை பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவரது மனைவி பாப்பாத்தி (26). இத்தம்பதிக்கு ஹாசி... மேலும் பார்க்க

மக்களை ஈா்க்கும் மானாத்தாள் ஏரி!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள மானத்தாள் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கக் குவிந்த மக்கள்கூட்டம். மேட்டூா் அணையின் உபரிநீா் நிரப்பும் திட்டத்தின் கீழ், மானத்தாள் ஏரி தற்போது நிரம்பிவழிகிறது. இதையடு... மேலும் பார்க்க

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 28 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 28 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய நபா் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். ஒடிஸா... மேலும் பார்க்க