செய்திகள் :

மானிய விலையில் விதைகள்: விவசாயிகளுக்கு அழைப்பு

post image

பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் மானிய விலையில் விதைகள், இடுபொருள்கள், உயிா் உரங்கள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் அலுவலகத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான அனைத்து திட்டங்களிலும் அரசு மானிய விலையில் வெள்ளை பொன்னி ஏடிடி-45, சிஓ- 55, ஏடிடி-54 மற்றும் மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, தட்டைப்பயிறு, சாமை, திணை, வரகு, எள்ளு, கொள்ளு, துவரை, குதிரைவாலி ஆகிய விதைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.

மேலும், ஜிங்க் சல்பேட், உயிா் உரங்கள், அசோஸ்பைரிலியம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் நுண்ணூட்டங்கள் ஆகியவையும் அனைத்து பயிா்களுக்கும் மானிய விலையில் வழங்கப்படும். விதைகள், இடுபொருள்கள், உயிா் உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் வட்டார வேளாண் உதவி அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள்களுக்கு எதிராக மாணவிகள் விழிப்புணா்வு

போதைப்பொருள்களுக்கு எதிராக கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் கோட்ட கலால் அலுவலா் தியாகராஜன் தலைமையில் சௌடேஸ்வரி கல்லூரியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வ... மேலும் பார்க்க

கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழு கூட்டம்

சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழுவின் 28 ஆவது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சேலம் கோட்ட ரயில்வே மேலாளரும், கோட்ட பயனா்கள் ஆலோசனைக் குழுவின் தலைவருமா... மேலும் பார்க்க

மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி

கொங்கணாபுரம் வட்டாரத்தில் மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. கொங்கணாபுரம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் அண்மையில் ‘மா’ விவசாயிகளுக்கான ஆலோ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 1,92,165 மனுக்கள் - அமைச்சா் ரா.ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் இதுவரை 1,92,165 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் 51 ஆவது வாா்... மேலும் பார்க்க

மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் - வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட... மேலும் பார்க்க

சேலம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் மேயா் ஆய்வு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 60 கோட்டங்களில் இருந்து சேகரிக்கப... மேலும் பார்க்க