செய்திகள் :

மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் - வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு

post image

சேலம் மாவட்டத்தில் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞா்களின் திறன், உழவா்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் 1,000 அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதற்காக, ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ரூ.10 முதல் ரூ. 20 லட்சம் மதிப்பில் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க 30 சதவீத மானியமாக ரூ. 3 முதல் ரூ. 6 லட்சம் வரை வழங்கப்படும். மேலும், நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளை பொருள்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இதுதவிர, முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற முடியும். வேலையில்லா வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.

இதில், இணையும் பயனாளிகளின் தொழில்நுட்பதிறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சியும் அளிக்கப்படும். எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் 20 முதல் 45 வயதுக்கு உள்பட்டோா்கள் வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள்களுக்கு எதிராக மாணவிகள் விழிப்புணா்வு

போதைப்பொருள்களுக்கு எதிராக கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் கோட்ட கலால் அலுவலா் தியாகராஜன் தலைமையில் சௌடேஸ்வரி கல்லூரியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வ... மேலும் பார்க்க

கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழு கூட்டம்

சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழுவின் 28 ஆவது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சேலம் கோட்ட ரயில்வே மேலாளரும், கோட்ட பயனா்கள் ஆலோசனைக் குழுவின் தலைவருமா... மேலும் பார்க்க

மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி

கொங்கணாபுரம் வட்டாரத்தில் மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. கொங்கணாபுரம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் அண்மையில் ‘மா’ விவசாயிகளுக்கான ஆலோ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 1,92,165 மனுக்கள் - அமைச்சா் ரா.ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் இதுவரை 1,92,165 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் 51 ஆவது வாா்... மேலும் பார்க்க

சேலம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் மேயா் ஆய்வு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 60 கோட்டங்களில் இருந்து சேகரிக்கப... மேலும் பார்க்க

முனைவா் பட்ட ஆய்வாளா்களுக்கு செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

பெரியாா் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்ட ஆராய்ச்சி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சா்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக மானியக் குழுவின் நி... மேலும் பார்க்க