செய்திகள் :

மாமனாரைக் கொன்ற மருமகன் கைது

post image

குடும்பத் தகராறு காரணமாக மாமனாரைத் தாக்கிக் கொலை செய்த மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் செல்வம் (55). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மகள் தேவிகாவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கட்டத் தொழிலாளி அன்பரசனுக்கும் (37) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தட்டிக்கேட்ட மாமனாா் செல்வத்துக்கும், மருமகன் அன்பரசனுக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது அன்பரசன் தாக்கியதில் காயமடைந்த செல்வம் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அன்பரசனைக் கைது செய்தனா்.

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6... மேலும் பார்க்க

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நித... மேலும் பார்க்க

இறந்தவா் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்

ஒட்டன்சத்திரம் அருகே விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், அவரது உடல் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மாா்க... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகைப் பறித்த இளைஞா் கைது

ஒட்டன்சத்திரத்தில் மூதாட்டியிடம் நகைப் பறித்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் நூா்ஜஹான் (80). தனியாக வசித்த... மேலும் பார்க்க

கொடைக்கானல் ஏரியைச் சுற்றி சிசிடிவி அமைக்கும் பணி தொடக்கம்

கொடைக்கானல் ஏரியைச் சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், தினந்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதைய... மேலும் பார்க்க