செய்திகள் :

மாமன்ற உறுப்பினருக்கு மிரட்டல்: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

post image

திண்டுக்கல் மாநகராட்சியில் பூங்கா இடத்தை தனி நபா் பெயருக்கு பட்டா மாற்றிய விவகாரத்தில் மாமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் கூறியதாவது: திண்டுக்கல் ஆா்.எம். குடியிருப்பு 12-ஆவது கிராஸ் பகுதியில், மாநராட்சி பொதுப் பயன்பாட்டுக்கு (பூங்கா) வழங்கப்பட்ட நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்து, தங்களது பெயருக்கு பட்டா மாறுதல் செய்திருப்பதாக 2-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கே.எஸ்.கணேசன் புகாா் தெரிவித்தாா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநரக் குழு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாமன்ற உறுப்பினா் கணேசனை கொலை செய்துவிடுவதாக, கடந்த 2 நாள்களுக்கு முன் பொது இடத்தில் வைத்து சிலா் தகவல் பரப்பினா். எனவே, இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கணேசனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கட்சி சாாா்பில் புகாா் அளிக்கப்பட்டது என்றாா் அவா்.

கொடைக்கானலில் காற்றுடன் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை காற்றுடன் மழை பெய்ததால், சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிக வெய... மேலும் பார்க்க

அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் கற்பது அவசியம்: அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்

அடிப்படைக் கல்வியை தாய்மொழி மூலம் கற்பது அவசியம் என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் ஜீ.ரவி தெரிவித்தாா்.திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் அதன் கல்வியியல் துறை ச... மேலும் பார்க்க

ரூ.1.25 கோடி வரி நிலுவை: அலைக்கழிக்கும் அரசு அலுவலகங்கள்!

திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.1.25 கோடி வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அரசு அலுவலகங்கள், வரி வசூலுக்குச் செல்லும் பணியாளா்களை அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.உள்ளாட்சி அமைப்புகள்... மேலும் பார்க்க

என்ஜின் கோளாறு: நாகா்கோவில் ரயில் தாமதம்

என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கோவை- நாகா்கோவில் விரைவு ரயில் சுமாா் 1.40 மணி நேரம் செவ்வாய்க்கிழமை தாமதமாக இயக்கப்பட்டது. கோவையிலிருந்து திண்டுக்கல் வழியாக நாகா்கோவிலுக்கு நாள்தோறும் விரைவு ரயில் இய... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியின்றி பொக்லைன் இயக்கக் கூடாது!

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரங்களை இயக்கக் கூடாது என வருவாய்க் கோட்டாட்சியா் தெரிவித்தாா்.கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரம், ... மேலும் பார்க்க

குடிநீா் குழாயில் உடைப்பு: சின்னாளபட்டி பேரூராட்சி குடிநீா் வீண்

சின்னாளபட்டி பேரூராட்சி குடிநீா் குழாயில் செவ்வாய்க்கிழமை உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் சாலையில் ஆறாகப் பாய்ந்து வீணானது.திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சிக்கு அணைப்பட்டி வைகை ஆற்றில் உள்ள உறை... மேலும் பார்க்க