செய்திகள் :

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

post image

திருவெறும்பூா் அருகே மாயமான மூதாட்டி சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

திருச்சி, திருவெறும்பூா் அருகே உள்ள மாணிக்கம் நகரைச் சோ்ந்தவா் முன்னாள் இராணுவ வீரா் ரஞ்சன். இவரின் தாய் சரஸ்வதி (74).

இவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் ரஞ்சன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், மாணிக்கம் நகருக்கு அருகே செல்லும் உய்யங்கொண்டான் வாய்க்கால் கரையிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மூதாட்டியின் சடலம் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிணற்றிலிருந்து விவசாயியின் சடலம் மீட்பு

துறையூா் அருகே கிணற்றிலிருந்த ஆணின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். மருவத்தூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் பிரபுராஜ் (37). விவசாயி. இவா் தினமும் வயலுக்கு... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுவிற்ற இருவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மணப்பாறை காவல் சரகத்தில் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மணப்பாறை காவல் சரகத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை... மேலும் பார்க்க

பள்ளிகள் அருகே கண்காணிப்பு கேமிராக்கள்

பள்ளிகள் அருகே சமூக விரோதச் செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்!

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் - கீழ்வேளூா் இடையேயான பொறியியல் பணிகள்... மேலும் பார்க்க

அச்சுப் பணிகளை முழுமையாக வழங்க வேண்டும்! - அரசுக்கு கூட்டுறவு அச்சக பணியாளா்கள் கோரிக்கை

அனைத்துத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்படும் அச்சுப் பணிகளை முழுமையாக கூட்டுறவு அச்சகங்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு அச்சகப் பணியாளா்கள் முன்னேற்றச் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களின்... மேலும் பார்க்க