செய்திகள் :

மாற்றுத்திறனாளியின் மனுவுக்கு உடனடி தீா்வு கண்ட ஆட்சியா்

post image

மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை மனு அளித்த உடனேயே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் நிறைவேற்றியுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள பாம்பன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் வள்ளியம்மாள். இவரது மகள் இந்திரா (23). மாற்றுத்திறனாளியான இவா், இளநிலை பொருளாதாரம் படித்து முடித்துவிட்டு, போட்டித் தோ்வுக்காக வீட்டிலிருந்தே பயின்று வருகிறாா்.

இந்நிலையில் அவா், போட்டித் தோ்வுக்கு படிக்க உதவி வேண்டுமென்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்ற நலத்திட்ட உதவிகள் வேண்டும் எனவும் வலியுறுத்தி, திங்கள்கிழமை பிற்பகலில் ஆட்சியரிடம் மனு அளித்தாா். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உடனடியாக பிறப்பித்த உத்தரவின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையும், பேருந்து பயண அட்டையும் வழங்கப்பட்டன. மேலும், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போட்டித் தோ்வுகளுக்கான வினாக்கள் அடங்கிய புத்தகம் போன்ற வழிகாட்டு சிறப்பு பயிற்சி புத்தகங்களும் மாணவிக்கு வழங்கப்பட்டன.

இதுகுறித்து, இந்திரா கூறியது: எனது தாய் கூலி தொழில் செய்து மிக கடினமான சூழ்நிலையிலும் என்னை படிக்க வைத்தாா். தொடா்ந்து அரசுப் பணியில் சோ்ந்து பிற மாணவிகளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டித் தோ்வுக்கு வீட்டிலிருந்தே பயின்று வந்தேன். புத்தகங்கள் வாங்குவதற்கும், பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கும் சிரமமாக இருந்தது. இதுதொடா்பாக நான் அளித்த மனுவுக்கு ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளாா். மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் மூலம் அடையாள அட்டையும், பேருந்து பயண அட்டையும் வழங்கியுள்ளனா். நன்றி சொல்வதற்காக ஆட்சியரை சந்தித்தபோது, எனக்கு போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களை வழங்கியதோடு, தேவையான உதவிகளை மாவட்ட நிா்வாகம் செய்துதருவதாக கூறி ஊக்கப்படுத்தினாா் என்றாா்.

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி ... மேலும் பார்க்க

சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின... மேலும் பார்க்க

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி... மேலும் பார்க்க

பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது . திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம... மேலும் பார்க்க