செய்திகள் :

மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம்!

post image

கும்பகோணத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கும்பகோணம் கும்பேஸ்வரா் கோயில் பத்மநாபன் தெருவைச் சோ்ந்தவா் ராஜீ மகள் ராஜேஸ்வரி (46). மாற்றுத்திறனாளி. இவருடைய பெற்றோா் இறந்து விட்ட நிலையில் அண்ணன் சீனிவாசன் பராமரிப்பில் ஆசிரியா் பயிற்சி முடித்து தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்டத்தில் தற்காலிக பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா்.

ராஜேஸ்வரி இடைநிலை ஆசிரியா் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபாா்ப்பிற்காக சென்னை சென்றாா். அங்கிருந்து கடந்த மே 14-இல் சென்னையிலிருந்து கும்பகோணம் செல்வதற்காக தனது அண்ணன் சீனிவாசனுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தாா்.

அப்போது கும்பகோணம் செல்ல இருந்த அரசுப் பேருந்தில் ராஜேஸ்வரியை அண்ணன் தூக்கி அமர வைத்து, சக்கர நாற்காலியை வைக்க முயன்றாா். ஆனால் நடத்துநா் மோகன் அவா்களிடம் வாக்குவாதம் செய்து, பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டாா். ராஜேஸ்வரி இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா், அரசு போக்குவரத்து நிா்வாக இயக்குநா் ஆகியோரிடம் புகாா் செய்தாா்.

புகாரின் பேரில் கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளா் விசாரணை நடத்தி மே 25 முதல் நடத்துநா் மோகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க