செய்திகள் :

மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல்!

post image

உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் திருமண ஊர்வலத்தில் மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் தாம்ராவலி கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பகவத் சிங் என்பவரின் திருமணத்தையடுத்து, இசைக்குழுவினருடன்கூடிய திருமண ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிலையில், மாற்று சமூகத்தினர் வசிக்கும் தெருவுக்குள் பட்டியலின சமூகத்தினர் திருமண ஊர்வலம் நடத்தக் கூடாது என்று திருமண ஊர்வலத்தில் மாற்று சமூகத்தைச் (தாக்கூர் பிரிவு மக்கள்) சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 40 பேர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலின்போது இரும்புக் கம்பிகள், கூர்மையான ஆயுதங்கள், மரக் கட்டைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

திருமண ஊர்வலத்தை திருப்பி அனுப்பியதுடன், குதிரையில் அமர்ந்திருந்த மாப்பிள்ளையான பகவத் சிங்கை கீழே தள்ளி, இழுத்தும் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் 6 பட்டியலினப் பெண்கள் காயமடைந்த நிலையில், தங்கள் தெருவுக்குள் பட்டியலினத்தவர் வரக்கூடாது என்று எச்சரித்து விரட்டியுள்ளனர்.

இதையும் படிக்க:விசுவாசியும் துரோகியும் சேர முடியுமா? இபிஎஸ்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திருமண ஊர்வலத்தில் அதிக சப்தத்துடன் இசைக்குழுவினர் இசைத்ததால்தான் திருமண ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதாகக் கூறினர்.

இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்கள் தேடப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர். மேலும், இந்த விவகாரம் குறித்து பாஜக எம்.பி.யும் பாஜகவின் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தேசிய பொதுச்செயலாளருமான போலா சிங் கேள்வியெழுப்பியதற்கு முன்னர்வரையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பட்டியலினத்தவர் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து பாஜக எம்.பி. போலா சிங் ``இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் சாதிய பாகுபாட்டை வெளிப்படுத்தியவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வருங்காலத்தில் இதுமாதிரியான சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க வேண்டும் என்று கூறினார்.

கடந்த டிசம்பர் மாதத்திலும் இதே பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவரின் திருமண ஊர்வலத்திலும் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டு, திருமண ஊர்வலம் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திடீரென வெடித்த துப்பாக்கியால் இளம்பெண் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி வெடித்ததில் இளம்பெண் படுகாயமடைந்தார்.ஜம்மு-காஷ்மீரில் ராஜௌரி மாவட்டத்தில் உள்ள ஷிவானி (21) என்பவர், தனது துப்பாக்கியை வைத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில் ஷி... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக இதுவரை 14,000 ரயில்கள் இயக்கம்!

பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் சிரமமின்றி கலந்துகொள்ள இதுவரை 14 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்ப... மேலும் பார்க்க

28 மீ. உயரம்... புதிய சாதனை படைத்த தில்லி மெட்ரோ!

மெட்ரோ வழித்தடத்தை 28.37 மீட்டர் உயரத்தில் அமைத்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. ஹைதர்பூர் பட்லி மோர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடமானது, மெட்ரோ ரயில் செல்லும் மிக உ... மேலும் பார்க்க

மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்துவதா? பிரதமர் மோடி

மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்தும் பணிகளில் சில பிரிவினைவாத சக்திகள் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பல சூழல்களில் இத்தகைய பிரிவினைவாதிகளுடன் சில வெளிநாட்டு சக்திகள்... மேலும் பார்க்க

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு மின் பொறியாளர்கள் அமைப்பு அழைப்பு!

புதுதில்லி: மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து, வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.மின்சார பயன்பா... மேலும் பார்க்க

தில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்

தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எ... மேலும் பார்க்க