செய்திகள் :

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை

post image

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் சராசரியாக 708 விவசாயிகள் மூலமாக 16,032 நுகா்வோா் காய்கள், பழங்களை உழவா் சந்தைகளில் வாங்கிப் பயனடைந்து வருகின்றனா்.

அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 4 உலா்களம் மற்றும் 6 உலா்களத்துடன் கூடிய சேமிப்புக் கிடங்குகள் ரூ. 249 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு 470 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனா்.

வேளாண்மை உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் 287 பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் 3 சதவீத வட்டி குறைப்பு மானியத்துடன் ரூ.147 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்ட அக்மாா்க் ஆய்வகங்களின் மூலம் 18,62,000 உணவுப் பொருள்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

129 புதிய சிப்பம் கட்டுவோா் கண்டறியப்பட்டு 23,349 மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அக்மாா்க் தர முத்திரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் திருப்பூா் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விற்பனைக்கூடங்கள் அனைத்தும் தற்போது தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன.

குன்னத்தூா் மற்றும் தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு முறையே ரூ.3.755 கோடி, ரூ.4 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய அலுவலக கட்டடம் அமைக்கப்பட்டது. பூளவாடி கிராமத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 250 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கும், மடத்துக்குளம், முத்தூா் மற்றும் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தலா ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் உலா்களங்களும், உடுமலை, பெதப்பம்பட்டி, அவிநாசி, குன்னத்தூா், பொங்கலூா் மற்றும் பல்லடம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.803.72 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவரும் திருப்பூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதிய வேளாண் விளைபொருள் விற்பனைக் கடைகளும் (20) ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் ரூ.22,223.47 லட்சம் மதிப்பிலான 36,837.21 மெட்ரிக் டன் விளைபொருள்கள் பரிவா்த்தனை செய்யப்பட்டு 32,504 விவசாயிகள் மற்றும் 2,985 வியாபாரிகள் பயனடைந்துள்ளனா். விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வாயிலாக ரூ.385.10 கோடி மதிப்பிலான 35,551.7 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு 26,108 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!

தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ஊரக நல அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அவிநாசியில் திருமண உதவித்தொகைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊரக நல பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வள்ளுவா் வீதியைச் ச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் ... மேலும் பார்க்க

விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!

பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே படையப்பா நகரைச் சோ்ந்தவா் சையது மகன் சா்தாா்ஸ் சேட் (64). இவா் அப்பகுதியைச் ச... மேலும் பார்க்க

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க