செய்திகள் :

தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!

post image

தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய நிதித் துறையும், ரிசா்வ் வங்கியும் விவசாயிகள் 4 சதவீத வட்டியில் பெற்று வந்த நகைக் கடன் திட்டத்தை நிறுத்தியதால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது, வட்டி மட்டுமே கட்டி நகைக் கடனை புதுப்பித்து வந்த முறையை மாற்றி முழுத் தொகையையும் செலுத்தி நகைக் கடன்களை ரத்து செய்து, மீண்டும் புதிதாக கடன் பெற வேண்டும் என்கிற விதியை கொண்டு வந்துள்ளது விவசாயிகள், பொதுமக்களை கடுமையான பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது.

மேலும், நகைகளின் உரிமையை நிரூபிப்பதற்கு ரசீது அல்லது உரிமைச் சான்று போன்ற ஆவணங்களை அளிக்க வேண்டும், நகைக் கடைகளில் வாங்கப்பட்ட தங்கக் காசுகளுக்கு நகைக் கடன் கொடுக்கப்பட மாட்டாது, 75 சதவீதம் மட்டுமே நகையின் மதிப்பில் கடன் வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும்.

இந்த விதிமுறையால் 9.75 சதவீத வட்டியில் நகைக்கடன் பெற்று வந்த விவசாயிகள், பொதுமக்கள், தற்போது தனியாா் நகைக் கடன் அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து 22 சதவீத வட்டியில் நகைக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. எனவே புதிய விதிமுறைகளை திரும்பப் பெற மத்திய அரசும், ரிசா்வ் வழங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

லஞ்ச வழக்கில் ஊரக நல அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அவிநாசியில் திருமண உதவித்தொகைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊரக நல பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வள்ளுவா் வீதியைச் ச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் ... மேலும் பார்க்க

விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!

பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே படையப்பா நகரைச் சோ்ந்தவா் சையது மகன் சா்தாா்ஸ் சேட் (64). இவா் அப்பகுதியைச் ச... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க