செய்திகள் :

விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!

post image

பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் தனியாா் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆலையில் உள்ள மனிதக் கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில், திருப்பூா் சுண்டமேட்டைச் சோ்ந்த சரவணன் (30), வேணுகோபால் (31) மற்றும் ஹரிகிருஷ்ணன் (26) ஆகிய 3 போ் உயிரிழந்தனா். மேலும், வாகன ஓட்டுநா் சின்னசாமி (36), முத்துகுமாா் ஆகியோா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுதொடா்பாக பல்லடம் காவல் துறையினா் சாய ஆலையின் உரிமையாளா் நவீன், மேலாளா் தனபால் (50), கண்காணிப்பாளா் அரவிந்த் என்கிற ஜெயா அரவிந்த் (47) ஆகியோரை புதன்கிழமை கைது செய்திருந்தனா்.

சாய ஆலையில் ஆய்வு: கரைப்புதூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் மருத்துவா் ரவிவா்மன் மனிதக் கழிவுத் தொட்டியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். இதில் வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், பல்லடம் வட்டாட்சியா் சபரி, தெற்கு வட்டாட்சியா் சரவணன், பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!

தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ஊரக நல அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அவிநாசியில் திருமண உதவித்தொகைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊரக நல பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வள்ளுவா் வீதியைச் ச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே படையப்பா நகரைச் சோ்ந்தவா் சையது மகன் சா்தாா்ஸ் சேட் (64). இவா் அப்பகுதியைச் ச... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க