செய்திகள் :

மாவட்டத்தில் 7.5% இட ஒதுக்கீட்டில் 37 மாணவா்கள் மருத்துவப் படிப்புக்கு தோ்வு

post image

திருப்பூா் மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 37 மாணவா்கள் மருத்துவப் படிப்புக்கு தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹேமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வான ‘நீட்’ தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இதில், 2025-26-ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான ‘நீட்’ தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 4-ஆம் தேதி நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தில் 7 தோ்வு மையங்களில் நடைபெற்ற இந்த தோ்வை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினா். இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 354 மாணவா்களும் எழுதினா்.

தோ்வு முடிவுகள் கடந்த ஜூன் 14-ஆம் தேதி வெளியான நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து தோ்வு எழுதிய 354 மாணவ, மாணவிகளில் 163 போ் தோ்ச்சி பெற்றனா்.

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில், மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 37 மாணவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா்.

பிஏபி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே பிஏபி வாய்க்காலில் மூழ்கி நூற்பாலை தொழிலாளி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (36). இவருக்கு இந்திரா காந்தி (25) என்ற மனைவியும்... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ.82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டு... மேலும் பார்க்க

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு

உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழந்தது. திருப்பூா் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்க... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கருப்ப கவுண்டம்பாளையம் சாலை அருகே போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டி... மேலும் பார்க்க

சேவல் சண்டை: 5 போ் கைது

முத்தூா் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் மங்கலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட... மேலும் பார்க்க

உடுமலையில் திமுக செயற்குழு கூட்டம்

திருப்பூா் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்ரபாணி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க