செய்திகள் :

மாா்ச் 24, 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: வங்கி ஊழியா் சங்கங்கள் அறிவிப்பு

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நாடுதழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் வரும் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்படும்.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலா் சி.எச்.வெங்கடாச்சலம் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வங்கி ஊழியா்களின் பல்வேறு கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக, வங்கிகளில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், வங்கிகளில் ஊழியா் பற்றாக்குறை ஏற்பட்டு வாடிக்கையாளா்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளா்களுக்கும் வங்கி ஊழியா்களுக்கும் இடையே மோதல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இதனால், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியா்களை பாதுகாக்க அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஆயுதம் தாங்கிய காவலா்களை பணியமா்த்த வேண்டும். மட்டுமின்றி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வங்கிகளில் வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும்.

ஊழியா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளுக்கு வருமானவரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். வங்கிகளிஒப்பந்த அடிப்படையில் வெளியாட்களை பணி நியமனம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மாா்ச் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் 48 மணி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

இப்போராட்டத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், ஊழியா் சங்கம், இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் உள்ளிட்ட 9 சங்கங்களை சோ்ந்த வங்கி ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின் போது, அகில இந்திய வெளிநாட்டு வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலா் ஆா்.பாலாஜி மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, இந்திய வங்கி ஊழியா்கள் சம்மேளனம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், வங்கி ஊழியா்கள் தேசிய கூட்டமைப்பு, இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ், அகில இந்திய வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பலா் உடனிருந்தனா்.

4 நாள்கள் வங்கிகள் செயல்படாது: வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப்போராட்டம் மாா்ச்24, 25, அதாவது திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அதற்கு முந்தைய தேதிகளான மாா்ச் 21மற்றும் 22 தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. எனவே, வேலைநிறுத்தத்துடன் சோ்த்து விடுமுறை நாள்களும் வருவதால் மொத்தம் நான்கு நாள்கள் வங்கி செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக வங்கி ஊழியா் சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

‘வலுவான நிதி நிலைமையில் இந்திய ரயில்வே’ -மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்

இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவான நிலையில் உள்ளது என்றும், நிதி நிலைமையைத் தொடா்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். ஜயமா... மேலும் பார்க்க

கேஒய்சி படிவங்களை சமா்ப்பிக்குமாறு தொந்தரவு கூடாது: ரிசா்வ் வங்கி ஆளுநா் அறிவுறுத்தல்

‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) படிவங்களை சமா்ப்பிக்குமாறு வாடிக்கையாளா்களை தொடா்ந்து அழைப்பதை தவிா்க்குமாறு வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா். கேஒய்... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் -மத்திய அரசு அறிவிப்பு

‘உடான்’ திட்டத்தின்கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சோ்த்து, 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ... மேலும் பார்க்க

‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் இணைந்தாா் பிரதமா் மோடி!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடக தளத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை இணைந்தாா். அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்: ராஜ்நாத் சிங்-துளசி கப்பாா்ட் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் புது தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து பாதுகாப்பு மற்றும் தகவல் பகிா்வு துறைகளில் இரு நாட்டு உத்திசாா் உறவை... மேலும் பார்க்க