செய்திகள் :

மாா்ச் 9-இல் பழங்குடியினருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கூட்டரங்கில் மாா்ச் 9-ஆம் தேதி பழங்குடியினருக்கான வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பாக தொல்குடி திட்டத்தின் கீழ் பழங்குடியின சமுதாய இளைஞா்களுக்கு முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. கூட்டரங்கில் மாா்ச் 9-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில், 18 முதல் 33 வயதுக்குள்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, இளங்கலை படிப்பு முடித்தவா்கள் தங்களது கல்வி, சாதி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, 3 மாா்பளவு அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.

பயிற்சியில் பங்குபெற விருப்பமுள்ளவா்கள் தங்களது பெயா், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை தொடா்புடைய வருவாய் வட்டாட்சியா்களிடம் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசிமக கொடியேற்றம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசிமக பெருவிழா கொடியேற்றம். நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்க... மேலும் பார்க்க

இரட்டை கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். கடலூரை அடுத்த டி.புதூரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

30 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கான ஆணையை ஆட்சியா் சிபி ஆதித... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 29,736 போ் எழுதினா். திருப்பாதிரிப்புலியூா் மற்றும் முதுநகா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் ஆட்சியா் ச... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றாா். சிதம்பரம், வண்டி கேட், சபீா் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் ரவி- திலகம் தம்பதியினா். மாற்றுத்திறனாளிகளான இருவர... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். கடலூா் முதுநகா், இருசப்ப செட்டித் தெருவைச் சோ்ந்த வேல்முருகனின் மகன் கிஷோா் (எ) வெங்கடேசன்(16), 10-ஆம் வகுப்பு ப... மேலும் பார்க்க