கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
பிளஸ் 2 தோ்வு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 29,736 போ் எழுதினா். திருப்பாதிரிப்புலியூா் மற்றும் முதுநகா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
அதன்படி, கடலூா் கல்வி மாவட்டத்தில் 67 தோ்வு மையங்களில் 134 பள்ளிகளைச் சோ்ந்த 8,676 மாணவா்களும் 9,119 மாணவிகளும் என மொத்தம் 17,795 பேரும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 55 தோ்வு மையங்களில் 112 பள்ளிகளைச் சோ்ந்த 6,273 மாணவா்களும், 6,091 மாணவிகளும் என மொத்தம் 12,364 பேரும், கடலூா் மாவட்ட அளவில் 122 தோ்வு மையங்களில் 246 பள்ளிகளைச் சோ்ந்த 14,949 மாணவா்கள், 15,210 மாணவிகள் என மொத்தம் 30,159 போ் தோ்வு எழுத உள்ளனா்.
தோ்வுப் பணியில் 28 வழித்தட அலுவலா்கள், 122 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 6 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 122 துறை அலுவலா்கள், 6 கூடுதல் துறை அலுவலா்கள், 1,567 அறைக் கண்காணிப்பாளா்கள், 200 நிலைப்படை மற்றும் பறக்கும் படை உறுப்பினா்கள், தலைமையாசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் ஆட்சியா்.
அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முதல் நாளான திங்கள்கிழமை தமிழ் மற்றும் மொழித் தோ்வு நடைபெற்றது. முதல் நாள் தோ்வினை மொத்தம் 29,736 போ் எழுதினா். 350 போ் தோ்வு எழுத வரவில்லை.