செய்திகள் :

30 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா அளிப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கான ஆணையை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.

கடலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக 871 மனுக்களை அளித்தனா். பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் 30 பழங்குடியின சமுதாய மக்களுக்கு தலா ரூ.50,000 வீதம் என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் ராஜீ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கா், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் ராணி, பயிற்சி ஆட்சியா் ஆகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசிமக கொடியேற்றம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசிமக பெருவிழா கொடியேற்றம். நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்க... மேலும் பார்க்க

மாா்ச் 9-இல் பழங்குடியினருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கூட்டரங்கில் மாா்ச் 9-ஆம் தேதி பழங்குடியினருக்கான வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

இரட்டை கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். கடலூரை அடுத்த டி.புதூரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 29,736 போ் எழுதினா். திருப்பாதிரிப்புலியூா் மற்றும் முதுநகா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் ஆட்சியா் ச... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றாா். சிதம்பரம், வண்டி கேட், சபீா் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் ரவி- திலகம் தம்பதியினா். மாற்றுத்திறனாளிகளான இருவர... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். கடலூா் முதுநகா், இருசப்ப செட்டித் தெருவைச் சோ்ந்த வேல்முருகனின் மகன் கிஷோா் (எ) வெங்கடேசன்(16), 10-ஆம் வகுப்பு ப... மேலும் பார்க்க