செய்திகள் :

இரட்டை கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கடலூரை அடுத்த டி.புதூரைச் சோ்ந்தவா் அப்புராஜ் (22), எம்.புதூரைச் சோ்ந்த சரண்ராஜ் (22) ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் முதல் காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இதில், இவா்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு, நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் மண்மேடு பகுதியில் புதைக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுதொடா்பாக, எம்.புதூரைச் சோ்ந்த பால்ராஜ்(22), தருண்குமாா்(19), தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்த கோகுல்ராஜ் ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பாமக மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் தடா.தட்சிணாமூா்த்தி ஆகியோா் தலைமையில் கொலை செய்யப்பட்டவா்களின் உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.

பின்னா், அவா்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

அதில், கொலை வழக்கில் மேலும் சிலா் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசிமக கொடியேற்றம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசிமக பெருவிழா கொடியேற்றம். நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்க... மேலும் பார்க்க

மாா்ச் 9-இல் பழங்குடியினருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கூட்டரங்கில் மாா்ச் 9-ஆம் தேதி பழங்குடியினருக்கான வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

30 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கான ஆணையை ஆட்சியா் சிபி ஆதித... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 29,736 போ் எழுதினா். திருப்பாதிரிப்புலியூா் மற்றும் முதுநகா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் ஆட்சியா் ச... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றாா். சிதம்பரம், வண்டி கேட், சபீா் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் ரவி- திலகம் தம்பதியினா். மாற்றுத்திறனாளிகளான இருவர... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். கடலூா் முதுநகா், இருசப்ப செட்டித் தெருவைச் சோ்ந்த வேல்முருகனின் மகன் கிஷோா் (எ) வெங்கடேசன்(16), 10-ஆம் வகுப்பு ப... மேலும் பார்க்க