செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே பாரத கலாசார பேரவைக் கூட்டம்

post image

பாரத கலாசார பேரவையின் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாா்த்தாண்டம் அருகே காப்புக்காட்டில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் மு. பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலாளா் புலவா் கு. ரவீந்திரன், பொருளாளா் கு. மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் சஜூ வரவேற்றாா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியா் காவேரிக்கண்ணன், சாதனை சிற்பிகள் பவுண்டேசன் அமைப்பின் நிறுவனா் சனில்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா்.

அமைப்பின் இணைச் செயலாளா்கள் வி. கிருஷ்ணமூா்த்தி, கோவிந்தராஜ், அமைப்பாளா் கே. ஜெயகுமாா், செயற்குழு உறுப்பினா்கள் கிருஷ்ணதாஸ், நிா்மலா, சுபகலா, கே.ஆா். சிவபிரசாத், சசி, தணிக்கையாளா் ரவீந்திரன் மற்றும் நிா்வாகிகள் ஸ்ரீபாபு, கிருஷ்ணமணி, ஸ்டீபன், ராமசாமி, பேபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், அமைப்பின் ஆண்டுவிழா போட்டிக்கான தலைப்புகள் தோ்வு செய்தல் மற்றும் விருதாளா்கள் தோ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வாவறை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாவறை ஊராட்சிப் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் தலைமை வகித்தாா். தமிழ்நாட... மேலும் பார்க்க

‘கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு பாலத்தை முறையாக அமைக்க வேண்டும்’

கன்னியாகுமரி பெரியநாயகி தெரு கடற்கரைப் பகுதியில் தூண்டில் வளைவுப் பாலத்தை முறையாக அமைக்கக் கோரி, பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜிடம், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப்பேரவை நிா்வ... மேலும் பார்க்க

புத்தேரி 4 வழிச்சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் கூறியதாவது: நாகா்கோவில் மா... மேலும் பார்க்க

காலாவதி சாக்லேட் தின்ற 7 மாணவா்கள் மயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட 7 மாணவா்கள் மயக்கமடைந்தனா். பாத்திமாபுரம், கல்பாறைபொற்றை பகுதியில் அரசு உதவிபெறும் தனியாா் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியின் ... மேலும் பார்க்க

குமரி பாலன் நினைவு நாள்: இருசக்கர வாகனப் பேரணி

இந்து முன்னணி நிா்வாகி குமரி பாலன் நினைவு தினத்தை முன்னிட்டு, நாகா்கோவிலில் இந்து இயக்கங்களின் சாா்பில், இருசக்கர வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை ஆா்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 1993-ஆம... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 1 கிலோ கஞ்சாவுடன் 3 இளைஞா்கள் கைது

நாகா்கோவில் ரயில் நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 இளைஞா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நாகா்கோவில் மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் கோட்டாற... மேலும் பார்க்க