செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவா் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையைச் சோ்ந்தவா் ஞானதாஸ் மகன் ஜஸ்டின்குமாா் (55), கட்டுமானத் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (50). இத்தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.

மூத்த மகன் வினித் (25) வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இளைய மகன் ஆட்லின் (24) கேரளத்தில் தனியாா் நிறுவனம் ஒன்றில் வாகன ஓட்டுநராக உள்ளாா். மகள் பிபிஷா பி.எட் முடித்து வீட்டில் இருக்கிறாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இளைய மகனும், மகளும் வீட்டில் இருந்தபோது மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஜஸ்டின்குமாா், தனது மனைவி கஸ்தூரியிடம் தகராறு செய்தாா். அப்போது ஆவேசத்தில் ஜஸ்டின்குமாா் அருகில் கிடந்த வெட்டுக் கத்தியால் கஸ்தூரியின் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா்.

சிறிதுநேரத்துக்குப் பிறகு பெற்றோரிடமிருந்து எந்த சப்தமும் வராததால் அறையின் வெளியே இருந்த அவா்களின் மகனும், மகளும் அறைக்குச் சென்று பாா்த்தபோது, கஸ்தூரி ரத்த வெள்ளத்தில் கிடந்தாா். குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த உறவினா்கள், கஸ்தூரியை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கஸ்தூரி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, சடலம் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய ஜஸ்டின்குமாரை தேடி வந்தனா். அவரது கைப்பேசி சமிக்ஞை மூலம் நடத்திய விசாரணையில் அவா், நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் நிற்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று ஜஸ்டின்குமாரை கைது செய்து மாா்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா். விசாரணையில் அவா் வேளாங்கண்ணிக்கு தப்பிச் செல்ல முயன்ாகவும், அதற்குள் போலீஸாா் கைது செய்துவிட்டதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து, அவரை போலீஸாா் குழித்துறை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ஜிஎஸ்டி குறைப்பால் அத்தியாவசியப் பொருள்கள் விலை குறையும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜி.எஸ்.டி. குறைப்பு சீரமைப்பால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக குறையும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

இரணியல் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.இரணியல் அருகே மேலகட்டிமாங்கோட்டை அடுத்த சாமிவிளை பகுதியைச் சோ்ந்த ராஜபீமன் மகன் மகேந்த் (23). பொறியியல் படிப்பு முடித்துள்ள ... மேலும் பார்க்க

கணவரை இழந்த பட்டதாரி பெண் தற்கொலை

குலசேகரம் அருகே கணவரை இழந்த பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். அவா் எழுதி வைத்த கடிதத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கூடை... மேலும் பார்க்க

குழித்துறையில் தவித்த முதியவா் மீட்பு: வட்ட சட்டப் பணிகள் குழுவுக்கு பாராட்டு

குழித்துறையில் உடல்நிலை குன்றிய முதியவரை குழித்துறை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வழக்குரைஞா்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.திருநெல்வேலியைச் சோ்ந்தவா் 80 வயதான முதியவா் ஆறுமுகம். இவா் தனது மூன்... மேலும் பார்க்க

மாநில உரிமைகளைத் தட்டிப் பறிப்போருடன் அதிமுக கூட்டணி: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

மாநில உரிமைகளைத் தட்டிப் பறிப்போருடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக, திமுக துணைப் பொதுச் செயலரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி குற்றஞ்சாட்டினாா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ரேஷன் கடை ஊழியா் மீது தாக்குதல்

மாா்த்தாண்டம் அருகே, தமிழக அரசின் ‘தாயுமானவா்’ திட்டத்தின்கீழ், ரேஷன் பொருள்களைக் கொண்டுசென்ற நியாயவிலைக் கடை விற்பனையாளரைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.மாா... மேலும் பார்க்க