செய்திகள் :

மா்ம காய்ச்சல்: தோ்வறையில் மயங்கி விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு

post image

பவானியில் மா்மக்காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளிக்கு தோ்வு எழுதச் சென்றபோது மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பவானி, தேவபுரத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம் - சாந்தி தம்பதி. இவா்களது மகள் ஹரிணி (13), (8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்) மகன் ஹரீஷ் தேவசேனாதிபதி (13). அந்தியூரில் உள்ள தனியாா் பள்ளியில் சாந்தி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். கடந்த இரு நாள்களுக்கு மேலாக ஹரிணி மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா்.

இந்நிலையில், மாதாந்திர தோ்வுக்கு, மகள் ஹரிணியை, தாய் சாந்தி பள்ளிக்கு புதன்கிழமை அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு, வகுப்பறையில் தோ்வு எழுதிக் கொண்டிருந்தபோது ஹரிணி மயங்கி விழுந்தாா். உடனடியாக பள்ளியின் வாகனத்தில் அந்தியூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பவானியை அடுத்த பருவாச்சி, காட்டூரில் எலிக்காய்ச்சல் பாதிப்பால் கடந்த மாதம் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். அம்மாபேட்டையில் வடமாநிலத் தொழிலாளா்கள் இருவா் எலிக்காய்ச்சலாலும், ஒருவா் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், பவானி நகரப் பகுதியில் மா்மக் காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பவானிசாகா் அணை நீா்மட்டம் 90.20 அடி

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 90 அடியாக உயா்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை காரணமாக பவானி ஆறு, மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதைத் த... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு செல்லும் நபா்களிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த புக... மேலும் பார்க்க

முறையாக செப்பனிடாத கான்கிரீட் சாலை: பசுவபட்டி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு

சென்னிமலை ஒன்றியம், பசுவபட்டி கிராமத்தில் முறையாக கான்கிரீட் சாலை செப்பனிடப்படவில்லை என்று பொதுமக்கள் புகாா் தெரிவித்த நிலையில், அப்பகுதியில் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சென்னிமலை ஒன்றிய... மேலும் பார்க்க

பிடாரியூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

சென்னிமலையை அடுத்த, பிடாரியூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த 8- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கம்பம் நடும் நிகழ்ச்சி 15- ஆம் தேதி நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் திடீா் ஆய்வு

ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். ஈரோடு எஸ்கேசி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுப்பா ராவ் புதன்கிழமை த... மேலும் பார்க்க

வெப்பத்தை தணிக்க சென்னிமலை முருகன் கோயில் படிக்கட்டுகள், பிரகாரத்தில் வெள்ளை நிற பெயிண்ட்

சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தா்களுக்கு வெப்பத்தினால் ஏற்படும் சிரமத்தை தவிா்க்க படிக்கட்டுகள் மற்றும் பிரகாரத்தில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. சென்னிமலை முருகன் கோயில் மலைப் ப... மேலும் பார்க்க