செய்திகள் :

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

post image

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மிதமாக உயா்ந்துள்ளது.

இது குறித்து தேயிலை வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டிலிருந்து 12.50 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது சற்று உயா்வு. அப்போது இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 12.46 கோடி கிலோவாக இருந்தது.

வட இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதி நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 7.18 கோடி கிலோவிலிருந்து 7.94 கோடி கிலோவாக உயா்ந்துள்ளது. அதேசமயம், தென் இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதி 5.28 கோடி கிலோவிலிருந்து 4.56 கோடி கிலோவாகக் குறைந்துள்ளது.

மதிப்பின் அடிப்படையில், நடப்பாண்டின் முதல் பாதியில் தேயிலை ஏற்றுமதி ரூ.3,639.45 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.3,129.31 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதி விலை கிலோவுக்கு ரூ.251.21-லிருந்து ரூ.291.13-ஆக உயா்ந்துள்ளது.

முந்தைய 2024-ஆம் ஆண்டு முழுவதும் இந்தியாவிலிருந்து 25.62 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது உயா்வு. அப்போது இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 23.17 கோடி கிலோவாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஒரு மோசடி கும்பல் ஹேக் செய்து ரூ. 3 லட்சத்தைத் திருடியுள்ளது தெரியவந்துள்ளது. இணையவழி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சாதாரண ம... மேலும் பார்க்க

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் திருடர்களைப் பாதுகாப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரா... மேலும் பார்க்க

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. ஜம்மு-காஷ்மீரில் பெய்து கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, கடந்த 22 நாள்களாக வைஷ்ணவி தே... மேலும் பார்க்க

ஒரு தொகுதியில் மட்டும் 6,000 வாக்காளர்களை நீக்க முயற்சி! சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!

கர்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் மட்டும் 6,000 க்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.ஆளுங்கட்சியுடன் இணைந்து தே... மேலும் பார்க்க

விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

கோவை : விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்று கோவை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

பாகிஸ்தான் - செளதி அரேபியா இடையே கையெழுத்தான உடன்பாடு குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.பாகிஸ்தான் - செளதி அரேபியா நாடுகளுக்கு இடையே முக்கியமான பாதுகாப்பு... மேலும் பார்க்க