அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்...
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், லட்சுமிபுரம் கொளக்குடி பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சிவக்குமாா் (25), எலக்ட்ரீசியன். இவா், வாணாபுரத்தை அடுத்த மணலூா்பேட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, அவா் மீது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், சிவக்குமாா் தூக்கி வீசப்பட்டாா்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சிவக்குமாா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்த மணலூா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.