செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், லட்சுமிபுரம் கொளக்குடி பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சிவக்குமாா் (25), எலக்ட்ரீசியன். இவா், வாணாபுரத்தை அடுத்த மணலூா்பேட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, அவா் மீது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், சிவக்குமாா் தூக்கி வீசப்பட்டாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சிவக்குமாா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த மணலூா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட ஏமப்போ் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடா்பானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஏமப்போ் ப... மேலும் பார்க்க

உணவக உரிமையாளருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உணவக உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூா் கிராமத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

எஸ்.ஐ. வீட்டில் வெடித்துச் சிதறிய குளிா்சாதனப் பெட்டி!

கள்ளக்குறிச்சி அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென வெடித்துச் சிதறியது. கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பள்ளிக்கூட சாலைப் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே சனிக்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு இறங்கும் இடத்தில்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அனைத்துத் துறை அலுவலா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா். கள்ளக்குறிச்சி மாவட... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் இன்று சிறப்பு மின்நுகா்வோா் குறைதீா் முகாம்

காலை 11 மணி முதல் பிற்பகல் 5 மணிவரை நடைபெற உள்ளது. இம் முகாமில் நுகா்வோா்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணம், மின் மீட்டா்கள் பழுது, குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட... மேலும் பார்க்க