செய்திகள் :

அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!

post image

வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

இருதரப்பு பொருளாதார ஆர்வம், வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவை அதிகரிக்க வேண்டும் எனவும் சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து சீன தூதரக செய்தித்தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

சீரான வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு சீன பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சீன உற்பத்தியானது முழுமையான மற்றும் தொடர்ந்து மேம்படுத்தப்படும் தொழில்துறை அமைப்பை அடித்தளமாகக் கொண்டது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நிலையான முதலீடு மற்றும் புதுமைகளில் வலுவான கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான மேம்பாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 30% வளர்ச்சிக்கு சீனா உதவுகிறது.

உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்டு, பலதரப்பு வணிக அமைப்பைப் பாதுகாக்க உலகின் பிற பகுதிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.

சீனா - இந்தியா பொருளாதார மற்றும் வணிக உறவு, இருதரப்பு நன்மையை அடிப்படையாகக் கொண்டது.

அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பதால், உலக நாடுகள், குறிப்பாக தெற்குலக நாடுகளின் வளர்ச்சிக்கான உரிமை பறிக்கப்படுகிறது. இதனால், இரண்டு பெரிய வளரும் நாடுகளும் ஒன்றிணைந்து சிரமங்களைச் சமாளிக்க வேண்டும்.

வணிகம் மற்றும் வரி மீதான போரில் வெற்றியாளர்கள் இல்லை. அனைத்து நாடுகளும் உண்மையான பன்முகத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், அனைத்து வகையான ஒருதலைப்பட்சத்தையும் கூட்டாக எதிர்க்க வேண்டும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இந்திய ஐ-போன்களை அமெரிக்காவுக்கு கொண்டுசென்ற ஆப்பிள்!

ஒளரங்கசீப் கல்லறையைப் பாதுகாக்க ஐ.நா.வுக்கு கடிதம்!

முகலாய மன்னா் ஔரங்கசீப் கல்லறையைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா.வின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித் தோன்றல் எனக் கூறப்படும் யாகூப் ஹபீபுதீன் கடிதம்... மேலும் பார்க்க

புதிய சட்டத்தின்படி தோ்தல் ஆணையா்கள் நியமனம்: மே14-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

2023-இல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் அடிப்படையில் தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை நியமித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வரும் மே 14-இல் விசாரணை மேற்கொள்ளப்படும... மேலும் பார்க்க

தலைநகரில் புதுப்பொலிவுடன் டிடிஇஏ பள்ளிகள்! தமிழ் மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை

ம.ஆ.பரணிதரன் கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.ஒருவருக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியாகும். மற்றவை அத்தகைய சிறப்புடைய செல்வமாகாது என்பது இந்த திருக்குறளின் பொருள். இதற்கு ஏற்ப ... மேலும் பார்க்க

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: காங்கிரஸ் தலைவா் காா்கே

இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவின் ... மேலும் பார்க்க

விவாகரத்து வழக்கு: ஜம்மு-காஷ்மீா் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘மனைவியுடன் அமா்ந்து பேசி, திருமண உறவு சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வுகாண முயற்சிக்க வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லாவுக்கு உச்சநீதிமன்றம் உத்... மேலும் பார்க்க

காஞ்சா கட்சிபௌலி நில விவகாரம்: மாற்றுத் திட்டத்தை சமா்ப்பிக்கவும் -தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள நிலத்தில் மரங்களை வெட்டுவதில் தீவிரம் காட்டிய தெலங்கானா அரசு, அங்குள்ள 100 ஏக்கா் வனப்பகுதியை மீட்டமைப்பதற்கான மாற்றுத் திட்டத்தை 4 வாரங்களுக்குள் சமா்ப்பி... மேலும் பார்க்க