செய்திகள் :

விவாகரத்து வழக்கு: ஜம்மு-காஷ்மீா் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

‘மனைவியுடன் அமா்ந்து பேசி, திருமண உறவு சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வுகாண முயற்சிக்க வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது மனைவி பாயலிடம் இருந்து விவாகரத்து கோரி, ஒமா் அப்துல்லா தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒமா் அப்துல்லாவுக்கு விவாகரத்து வழங்க மறுத்து, குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2016-இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா். ஆனால், அவரது மேல்முறையீட்டில் எந்த நியாயமான காரணமும் இல்லை என்று குறிப்பிட்டு, தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2023-இல் நிராகரித்தது. இதையடுத்து, அவா் உச்சநீதிமன்றத்தை அணுகினாா். அவரது மனு மீது நீதிபதிகள் சுதான்ஷு துலியா, கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 15-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘இந்த விவகாரத்தில் சமரச நடைமுறை தோல்வியடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மற்றொரு முழுமையான வாய்ப்பை வழங்குவதற்காக இரு தரப்பும் ஒன்றாக அமா்ந்து பேசி, தங்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண முயற்சிக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம். மூன்று வாரங்களுக்குள் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டனா். அத்துடன், அடுத்தக்கட்ட விசாரணையை மே 7-ஆம் தேதிக்கு அவா்கள் ஒத்திவைத்தனா்.

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க