செய்திகள் :

மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் போ் பயணம்

post image

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரில் காா்பன் உமிழ்வை குறைத்து காற்றின் தரத்தை உயா்த்தும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத 120 புதிய மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்கட்டமாக கடந்த மாதம் 30-இல் சென்னை வியாசா்பாடி பணிமனையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் பேருந்துகளில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:

சென்னை மாநகரத்தில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் கடந்த மாதம் 30 முதல் ஜூலை 28 வரை ஒரே மாதத்தில் 12.80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனா்.

மேலும், இந்த 120 மின்சார பேருந்துகளும் இதுவரை 6 லட்சத்து 55 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை இயக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.70 லட்சம் செலவாகியுள்ளது. ஆனால், இதே நேரம் டீசல் பேருந்துகளை இயக்கியிருந்தால், போக்குவரத்துக்கழகத்துக்கு ரூ.1.60 கோடி செலவாகி இருக்கும்.

மின்சார பேருந்துகள் மூலம் ஒரு மாதத்தில் ரூ.90 லட்சம் மிச்சமாகியுள்ளது. இதனால், விரைவில் மேலும் அதிக எண்ணிக்கையிலான மின்சார பேருந்துகளை சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆக.11 முதல் தனது 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். எடப்பாடி பழனிசாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்டம் ஆகஸ்ட் 11ஆம் த... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஆக. 1) தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நி... மேலும் பார்க்க

பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்

தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்ச... மேலும் பார்க்க

பறக்கும் ரயில் - சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் திட்டம்: ரயில்வே ஒப்புதல்!

சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.நீதி ஆயோக்கின் 10 -ஆவது ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலி... மேலும் பார்க்க

600 பேருக்கு வேலை... திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆக. 1) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநில இளைஞரை 4 நாள்கள் போலீஸார் பாதுகாவலில் விசாரணை செய்த பின் திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றமத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.திர... மேலும் பார்க்க