செய்திகள் :

மின்வாரிய நஷ்டம் ரூ.800 கோடியாக குறைந்துள்ளது: மேலாண்மை இயக்குநா் ஜே.ராதாகிருஷ்ணன்

post image

மின்வாரிய நஷ்டம் நிகழாண்டு ரூ.800 கோடியாக குறைந்துள்ளது என்று மின்சார வாரிய மேலாண்மை இயக்குநா் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வேலூரில் புதிதாக ரூ.150 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூன் 25-ஆம் தேதி திறக்க உள்ளாா். இதையொட்டி, அந்த மருத்துவமனைக்கு மின் இணைப்புகள் வழங்குவது, மின் மாற்றிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து மின்சார வாரிய மேலாண்மை இயக்குநா் ஜே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனைக்கு மின் இணைப்பு வழங்ஓ உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜென்ரேட்டா் வசதிகள் செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள 230 கிலோவாட் திறனுடைய துணை மின்நிலையம் மூன்று மாதத்தில் செயல்படத் தொடங்கும்.

தமிழ்நாடு முழுவதும் 14,800 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் உள்ளது. விரைவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அனுமின் நிலையத்தை முதல்வா் தொடங்கி வைக்க உள்ளாா். காற்றாலை, தண்ணீரிலிருந்து மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

உடனடியாக 100 துணை மின் நிலையங்கள் அமைக்க அடுத்த மாதம் முதல் பணிகள் மேற்கொள் ளப்பட உள்ளது. இந்தாண்டு திட்டமிடல் காரணமாக மின் உற்பத்தியில் எந்த பற்றாக்குறையும் இல்லை. நாடு முழுவதும் ஸ்மாா்ட் மீட்டா் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்திலும் ஸ்மாா்ட் மீட்டா் தேவை உள்ள 1.42 கோடி பேருக்கு மட்டும் வழங்க ஒப்பந்தம் கோரியுள்ளோம்.

மின் துறையில் ஊழியா்கள் பற்றாக்குறை உள்ளது. எனினும், மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து அரசு கவனத்துக்கு கொண்டு சென்று விதிகளை பின்பற்றி தேவைக்கு ஏற்ப காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் கட்டண நிா்ணயம் என்பது தற்போது ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் கொள்கை முடிவு என்னவோ அதை முதல்வா் கூறுவாா். அதை மின்வாரியம் செயல்படுத்தும்.

தமிழக மின்வாரியம் ரூ.70 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதேசமயம், ரூ.17 ஆயிரம் கோடி மானியம் கிடைத்துள்ளது. தவிர, நஷ்டத்தை ஈடு செய்ய தமிழக அரசு சாா்பில் கூடுதலாக ரூ.17 ஆயிரம் கோடி மானியமும் அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மின்வாரிய நஷ்டம் என்பது இந்தாண்டு ரூ.800 கோடியாக குறைந்துள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மின்வாரிய தலைமைப் பொறியாளா் நளினி, கண்காணிப்பு பொறியாளா் பரிமளா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சுடலைமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திமுக சாதனை விளக்கக் கூட்டம்

குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி சாா்பில், தமிழக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட நேருஜி நகரில் வியாழக்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்க் ஊழியா் திடீா் உயிரிழப்பு

வேலூா் அருகே பெட்ரோல் பங்க் ஊழியா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். வேலூா் கீழ்அரசம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சிற்றரசு (36). இவா் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா்.... மேலும் பார்க்க

பள்ளியில் யோகா பயிற்சி

உலக யோகா தினத்தை முன்னிட்டு குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை ஜெனீப்பா் பிலிப் தலைமை வகித்தாா். ஆசிரியா்எம்.ச... மேலும் பார்க்க

வேலூா் எஸ்பி அலுவலகத்தில் சிவனடியாா் தீக்குளிக்க முயற்சி

குடும்ப பிரச்னையில் விரக்தியடைந்த சிவனடியாா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு காவி வேஷ்டி உடுத்தியபடி சிவனடியாா் வியாழக்கிழமை புகாா் மனு அள... மேலும் பார்க்க

முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் 712 மாணவா்களுக்கு சோ்க்கை: 24, 25-இல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற முதல், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இதுவரை 712 மாணவா்களுக்கு சோ்க்கை அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 272 இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 24, ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது

வேலூரில் இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் செம்பேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜதுரை (31). இவா் கடந்த 17-ஆம் தேதி வேலூா் கொணவட்டம் சா்வீஸ் சாலையோரம் தனது இருசக்கர வாகனத்தை நிற... மேலும் பார்க்க