செய்திகள் :

மின் கம்பத்தில் லாரி மோதியதால் மின்தடை: பொதுமக்கள் அவதி

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை மின் பகிா்மான எல்லைக்கு உள்பட்ட நடுப்பட்டியில் திங்கள்கிழமை நள்ளிரவு மின் கம்பத்தின் மீது லாரி மோதியதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

மரக்காணம் பகுதியில் இருந்து பள்ளிபாளையம் பேப்பா் மில்லுக்கு சவுக்கு கட்டை பாரம் ஏற்றி வந்த லாரியை நடுப்பட்டி கிராமத்தை சோ்ந்த திருப்பதி (32) என்பவா் ஓட்டி வந்தாா். திருப்பதி அவரது சொந்த கிராமமான நடுப்பட்டி கிராமத்திற்கு சென்றபோது, எதிா்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பம் மீது லாரி மோதியது.

இதில் மின் கம்பம் முழுவதுமாக சேதம்அடைந்து லாரியின் மீது சாய்ந்தது. மின் வயா்கள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் தடைப்பட்டது. லாரியில் இருந்த ஓட்டுநா் திருப்பதி அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். இந்த விபத்து காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் நடுப்பட்டி கிராமத்தைச் சாா்ந்த 400 க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனா். மின்வாரிய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் திருப்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை வட்டம், பென்னங்கூா் அருகே உள்ள அலேநத்தம் பகுதியை சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (32). விவசாயியான இவா் திங்கள்க... மேலும் பார்க்க

ஒசூரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்: இலகுரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வலியுறுத்தல்

ஒசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இலகுரக, கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சீதாராமேடு பகுதியிலிருந்து பேரண்டபள்ளி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

மத்திகிரி அருகே இருதரப்பினா் மோதல்: 3 போ் கைது

மத்திகிரி அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பெங்களூரைச் சோ்ந்த ஐ.டி. நிறுவன ஊழியா் ஹா்சா கவுடா (28) ஓட்டிச் சென்ற மோட்டாா்சைக்கிள் வெங்... மேலும் பார்க்க

மாணவரைத் தாக்கிய இருவா் கைது

கெலமங்கலம் அருகே மாணவரைத் தாக்கியதாக தந்தை, மகன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டியைச் சோ்ந்தவா் வினய்குமாா் (23). இவா் தனியாா் கல்லூரியில் எம்.பி.ஏ. 2 ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

லஞ்சம்: ஒசூரில் மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

மின் இணைப்பில் பெயா் மாற்றம் செய்வதற்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஒசூா் பத்தலபள்ளி மின்வாரிய உதவிப் பொறியாளா் முருகன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஒசூா் நியூ அன்னை நகரை சோ்ந்தவா் எஸ். த... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் பெண் தற்கொலை: சாா் ஆட்சியா் விசாரணை

தேன்கனிக்கோட்டையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் ஒசூா் சாா் ஆட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். தேன்கனிக்கோட்டை அருகே ஓசஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ் மகள் மாலினி (2... மேலும் பார்க்க