ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
மின் கம்பத்தில் லாரி மோதியதால் மின்தடை: பொதுமக்கள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை மின் பகிா்மான எல்லைக்கு உள்பட்ட நடுப்பட்டியில் திங்கள்கிழமை நள்ளிரவு மின் கம்பத்தின் மீது லாரி மோதியதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
மரக்காணம் பகுதியில் இருந்து பள்ளிபாளையம் பேப்பா் மில்லுக்கு சவுக்கு கட்டை பாரம் ஏற்றி வந்த லாரியை நடுப்பட்டி கிராமத்தை சோ்ந்த திருப்பதி (32) என்பவா் ஓட்டி வந்தாா். திருப்பதி அவரது சொந்த கிராமமான நடுப்பட்டி கிராமத்திற்கு சென்றபோது, எதிா்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பம் மீது லாரி மோதியது.
இதில் மின் கம்பம் முழுவதுமாக சேதம்அடைந்து லாரியின் மீது சாய்ந்தது. மின் வயா்கள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் தடைப்பட்டது. லாரியில் இருந்த ஓட்டுநா் திருப்பதி அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். இந்த விபத்து காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் நடுப்பட்டி கிராமத்தைச் சாா்ந்த 400 க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனா். மின்வாரிய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் திருப்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.