செய்திகள் :

மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!

post image

மத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிரப்பப்பட உள்ள 976 இளநிலை அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 09/2025/CHQ

பணி: Junior Executives

காலியிடங்கள்: 976

துறைவாரியான காலியிடங்கள்:

1. Architecture - 11

2. Civil - 199

3. Electrical - 208

4. Electronics - 572

5. Information Technology - 31

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 27.9.2025 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி ஆகிய பிரிவுகள் அல்லது அதற்கு இணையான ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக், கட்டடக்கலை பிரிவில் பி.ஆர்க், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் எம்சிஏ முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் கேட் -2023 அல்லது கேட் 2024-25 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு, மருத்துவத்தகுதித் தேர்வு ஆகியவற்றிற்கு அழைக்கப்படுவர். அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இதர அனைத்து பிரிவினரும் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.9.2025

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

எல்ஐசி வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி!

Airports Authority of India, an equal opportunity employer, invites applications from eligible candidates asper criteria laid down below to apply ONLINE through AAI’s Website www.aai.aero for the following posts. 

போக்குவரத்து கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மண்டல மேலாண் இயக்குநா்கள் வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாகை மாவட்ட சமூகநலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாகை மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் மிஷன் சக்தி திட்டம் - மாவ... மேலும் பார்க்க

திருச்சி ஐஐஎம்- இல் ஆசிரியரல்லாத பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருச்சியில் உள்ள இந்தியன் மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) காலியாகவுள்ள ஆசிரியரல்லாத பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் வ... மேலும் பார்க்க

எல்ஐசி வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி!

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்ப... மேலும் பார்க்க

தமிழக அரசு மருத்துவமனைகளில் உதவி மருத்துவ அலுவலர் பணி

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 27 உதவி மருத்துவ அலுவலர்(சித்தா) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ ஆட் சேர்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இரு... மேலும் பார்க்க

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

ரயில்வே மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பாரா மெடிக்கல் பணிகளுக்கு தகுதியானவர்ளிடம் இருந்து செப்.18-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் வருமாறு:அறிவிப்பு எண். : 03/20... மேலும் பார்க்க