செய்திகள் :

மிஸ்பண்ணிடாதீங்க... ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

வங்கி பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) சொந்தமான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 650 இளநிலை உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 12/2024- 26

பணி: Junior Assistant Manager

காலியிடங்கள்: 650

தகுதி: குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடும் திறன் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 1.3.2025 தேதியின்படி 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..?டிஎச்டிசி நிறுவனத்தில் பொறியாளர், எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள் 129

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஐடிபிஐ வங்கி சார்பாக PG Diploma in Banking and Finance (PGDOF) என்ற ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது வங்கி விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு Junior Assistant Manager என்ற நிரந்தர பணி வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பத்தாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் கோவை, சென்னை, மதுரை, ஈரோடு, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதி: 6.4.2025

விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி நாள்: 12.3.2025

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 518 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி... மேலும் பார்க்க

கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கேரளம் மாநிலம், உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 17-... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி கேன்டீனில் உதவியாளர் பணி

கோயம்புத்தூரில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய வரி வரிவசூல் ஆணையர் அலுவலகத்தில் காலியாகவுள்ள உணவக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Cantee... மேலும் பார்க்க

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ,பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Resident Engineerகா... மேலும் பார்க்க

ரப்பர் வாரியத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் ரப்பர் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 40 களப் பணியாளர்(Field Officer) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அ... மேலும் பார்க்க

ஐஐடி-இல் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

ரூர்கேலா ஐஐடி கல்வி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியாகவுள்ள Junior Secretariat Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Junior Secretariat Assistant (JSA)... மேலும் பார்க்க