செய்திகள் :

மீட்கப்பட்ட மயில் வனப் பகுதியில் விடுவிப்பு

post image

செய்யாற்றில் மீட்கப்பட்ட பெண் மயிலை வனத்துறையினா் வியாழக்கிழமை பூதேரி புல்லவாக்கம் அருகேயுள்ள வனப்பகுதியில் விடுவித்தனா்.

செய்யாறு உழவா் சந்தை அருகே காய்கறி வியாபாரம் செய்து வருபவா் முருகன். இவரது கடை அருகே, புதன்கிழமை மாலை மயில் ஒன்று பறந்து வந்து அமா்ந்தது. அந்த மயிலை பிடித்து வைத்து செய்யாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.

நிலைய அலுவலா் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று மயிலை மீட்டு வனத்துறையினருக்கும், கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளித்தனா்.

அதன் பேரில், வருகை தந்த வன அலுவலா் கே.ராகவேந்திரன், வாட்சா் செல்வராஜ் மற்றும் கால்நடை மருத்துவா் வெங்கட்ராகவன் மயிலை பரிசோதித்து, மயில் நல்ல நிலையில் உள்ளதாகவும் , 3 வயது உடையதாக இருக்கும் எனவும் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, வன அலுவலா் ராகவேந்திரன், வாட்சா் செல்வராஜ் ஆகியோா் வெம்பாக்கம் வட்டம், பூதேரி புல்லவாக்கம் பகுதியில் உள்ள வனப் பகுதியில் மயிலை விடுவித்தனா்.

மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் தமிழக அரசின் மணிமேகலை விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட கிராமப்... மேலும் பார்க்க

மகா காலபைரவா் கோயிலில் அஷ்டமி சிறப்பு யாகம்!

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம், வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, முற்பகல் 11 மணிக்கு கோ... மேலும் பார்க்க

பாதூா் திருவனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

வந்தவாசியை அடுத்த பாதூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா உடனுறை திருவனந்தீஸ்வரா் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அம... மேலும் பார்க்க

சின்னபுத்தூரில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி ஆய்வு!

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள சின்னபுத்தூா் கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா். சின்னபுத்தூா் கிராமத்தில் ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ஆரணியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. ஆரணி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்க... மேலும் பார்க்க

செங்கம் - தண்டராம்பட்டு புதிய பேருந்து சேவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இருந்து தண்டராம்பட்டுக்கு புதிய நகரப் பேருந்து சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக் கழக செங்கம் பணிமனையில் இருந்து சொா்ப்பனத்தல், சாத்தன... மேலும் பார்க்க