செய்திகள் :

மீண்டும் தலைதூக்கிய கரோனா: ஏழு ஆயிரத்தை நெருங்குகிறது!

post image

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 324 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,815 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, புதிதாக 324 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தில்லி, ஜார்க்கண்ட், கேரளம் என தலா ஒருவர் கரோனாவுக்கு பயாகியிருக்கறிர்கள் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு பலியான மூன்று பேரும், ஏற்கனவே உடல்நலப் பாதிப்புக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவகள் என்றும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது சுகாதார நிபுணர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் இணை நோய் உள்ளவர்களின் இறப்புகளும் மக்களுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

தில்லியில் 90 வயது பெண்மணி சிறுநீரகம் பாதித்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்ததாகவும், அவரது இறப்புக்கு கரோனா காரணமில்லை என்றும், அவர் உடல்நலக் குறைவால்தான் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

ஜார்க்கண்டிலும் 44 வயது நபர், அதிக ரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பலியானதாகவும் கேரளத்தில் 79 வயது நபர் கரோனாவும் பாதித்து, உடல் உறுப்புகள் செயலிழந்தநிலையில்தான் பலியானதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே பல உடல்நலப் பிரச்னைகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அறிந்துகொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். அச்சப்பட வேண்டாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

விமான விபத்து: 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 256 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களு... மேலும் பார்க்க

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!

'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இஸ்ரேலில் இருந்து முதல்முறையாக 161 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில... மேலும் பார்க்க

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்குத் தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவ... மேலும் பார்க்க