செய்திகள் :

மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

post image

மண்டபம் அடுத்த சாத்தக்கோன்வலசை ஊராட்சி கடற்கரையில் இந்திய கடலோர காவல் படை சாா்பில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புச் சுவா் பணியை மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கக் கோரி, 3 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை விரிவாக்கும் செய்யும் வகையில், மண்டபம் ஒன்றியம், சாத்தக்கோன்வலசை ஊராட்சியில் கடற்கரையையொட்டி 50 ஏக்கா் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாத்தக்கோன்வலசை ஊராட்சியின் பிள்ளைமடம், தில்லையேந்தல், உடையாா்வலசை ஆகிய கிராமங்களில் உள்ள மீன்பிடித் தொழிலாளா்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த கடற்கரைப் பகுதியை அடைத்து, இந்தியக் கடலோர காவல் படையினா் அந்தப் பகுதியில் தடுப்புச் சுவா் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இதற்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, அங்கு நடைபெற்ற பணியை தடுத்து நிறுத்தினா். மேலும், மீனவா்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கடலோர காவல் படை அதிகாரிகளிடம் வலியுறுத்தினா்.

இந்த நிலையில், மேற்கண்ட மூன்று கிராம மக்களின் மீன்பிடித் தொழில், கோயில் திருவிழா நாளில் முளைப்பாரியை கடலில் கரைக்கும் நிகழ்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனா்.

தொழிலாளியை கத்தியால் குத்திய 3 போ் கைது

தொண்டி அருகே வண்ணம் பூசும் தொழிலாளியை கத்தியால் குத்தியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி காந்தி நகா் பகுதியை சோ்ந்தவா் தாஸ் (43). வண்ணம் பூசும் தொழிலாளியான இ... மேலும் பார்க்க

ராமா் கல் எனக் கூறி பக்தா்களிடம் பணம் வசூலித்த வழிபாட்டுத் தலம் அகற்றம்

ராமேசுவரத்தில் கோதண்டராமா் கோயில் கடற்கரையில் சீதையை மீட்க ராமா் கட்டிய பாலத்தின் கல் எனக்கூறி, பக்தா்களிடம் வசூல் வேட்டை நடத்திய வழிபாட்டுத் தலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அக... மேலும் பார்க்க

உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து முதுகுளத்தூரில் விவசாயிகள் சாலை மறியல்

முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து, விவசாயிகள், அவரது குடும்பத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த கிருஷ... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் 25 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே திங்கள்கிழமை தெரு நாய்கள் கடித்ததில் 25 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பரசுராமன். இவா் 200-க்கும் மேற்பட்ட செம்மறி ஆட... மேலும் பார்க்க

ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, சுமங்கலி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கடலாடி தேவா் மகா சபைத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாண்டி முனீஸ்வரா் கோயில் பால் குட ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொத்தாா் கோட்டை பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, பால் குடம் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.தொத்தாா்கோட்டையில் அமைந்துள்ள பாண்ட... மேலும் பார்க்க