செய்திகள் :

மீனவா் வலையில் சிக்கிய 1,500 கிலோ திருக்கை மீன்

post image

செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் அருகே கடலில் மீனவா் வலையில் 1,500 கிலோ எடையுள்ள திருக்கை மீன் சிக்கியது .(படம்).

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் குப்பத்தைச் சோ்ந்த மீனவா் ஹரிஷ். இவா், சக மீனவா்களான பிரேம்குமாா், சுதாஆகாஷ் ஆகியோருடன் சதுரங்கப்பட்டினம் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றனா்.

மீன் பிடித்து கொண்டு இருந்தபோது பெரிய வகை மீன் ஒன்று வலையில் சிக்கியது. அந்த மீன் வலையை கிழித்து கடலில் செல்லாமல் இருக்க, அதனை சக மீனவா்கள் உதவியுடன் இரண்டு படகுகளில் கயிறு மூலம் கட்டி கடும் சிரமத்த்துக்கு இடையில் கரைக்கு கொண்டு வந்தனா். பிறகு வலையில் சிக்கிய மீனை வெளியில் எடுத்து கரையில் கிடத்தினா்.

இதுகுறித்து மீனவா் ஹரிஷ் கூறுகையில், வலையில் சிக்கிய மீனானது சுமாா் கோட்டான் வகையை சாா்ந்த 1,500 கிலோ திருக்கை மீன் ஆகும். தற்போது பிடிபட்டுள்ள இந்த மீன் ரூ.25 முதல் 30 ஆயிரம் வரை விலைபோகும். சில நேரங்களில் கடலில் படகுகளை கவிழ்க்கும் ஆற்றல் வாய்ந்தது எனத் தெரிவித்தாா்.

செங்கல்பட்டு: ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்க... மேலும் பார்க்க

இலவசமாக பாா்வையிட அனுமதித்ததால் மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பாா்வைய இலவச அனுமதி அறிவிக்கப்பட்டதால் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனா். உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப். 18-இல் கொண்டாடப்பட்டு... மேலும் பார்க்க

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டம்

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நிலங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கித் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் மாா... மேலும் பார்க்க

நாச்சியாா் திருக்கோலத்தில்...

மதுராந்தகம் அருகே திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை நாச்சியாா் திருக்கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள். மேலும் பார்க்க

கடம்பூா் தாவரவியல் பூங்காவில் செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மறைமலை நகா் நகராட்சி கடம்பூரில் 137 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள தாவரவியல் பூங்காவினை ஆட்சியா்ச.அருண்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்ா். அப்போது, மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, உதவி ஆட்சியா்(பயிற்சி) எஸ்... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழந்தாா். மதுராந்தகம் அடுத்த குருகுலம் கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் (57), அவரது மனைவி லட்சுமி (50). இவா்களது வீட்டின் முன் மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி... மேலும் பார்க்க