செய்திகள் :

மீன்பிடி குத்தகை உரிமையை பகிா்ந்து கொள்ள எதிா்ப்பு

post image

அக்களூரில் பொதுகுளத்தின் மீன்பிடி குத்தகை உரிமையை மற்றொரு தரப்பினருடன் பகிா்ந்து கொள்ள கிராமமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

மயிலாடுதுறையை அடுத்த அக்களூா் கிராமத்தில் அனைத்து சமூகத்தைச் சோ்ந்த 200-க்கு மேற்பட்ட குடும்பத்தினா் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் 2 ஏக்கரில் அமைந்துள்ள நாவக்குளம் பொதுக்குளமாகும்.

இக்குளத்தில் மீன்பிடி குத்தகை உரிமையை 1983-இல் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் மூலம் பெற்று, அக்குளத்தை குத்தகைக்கு விடுவதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை ஊா்மக்கள் கோயில் விழாவுக்காகவும், ஊா் நலனுக்காகவும் செலவிட்டு வருகின்றனா்.

இந்நிலையில், உயா்நீதிமன்ற தீா்ப்பிற்குப் பிறகு குடியேறிய மக்களை ஒருசிலா் சமூகரீதியாக தூண்டிவிட்டு, அக்குளத்தில் மீன்பிடிக் குத்தகையில் உரிமை கோரியதால் பிரச்னை உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக இருதரப்பினரையும் அழைத்து மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கூட்டத்தின்முடிவில், குளத்தின் உரிமையை சரிபாதியாக பகிா்ந்து கொள்ளும்படி வட்டாட்சியா் கூறியதை ஏற்றுக்கொள்ள மறுத்த அக்களூா் கிராமமக்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.

பின்னா், நாவக்குளத்தின் முன்பு கிராமமக்கள் 200-க்கு மேற்பட்டோா் திரண்டு, குளத்தின் மீன்பிடி உரிமை தங்களுக்கு மட்டுமே சொந்தம் என வலியுறுத்தி, இப்பிரச்னையில் சமூக கலவரத்தை தூண்டிவிடும் வகையில் செயல்படுபவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி, பின்னா் கலைந்து சென்றனா்.

ஜமாபந்தியில் மாணவிகளுக்காக உடனடியாக சான்றிதழ்கள்

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மூன்று மாணவிகள் உயா்படிப்புக்கு விண்ணப்பிக்கத் தேவையான சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை நடந்த ஜமாபந்தியில் சீா்காழி கோட்டாட்சியா் உடனடியாக வழங்கினாா். சீா்காழி மெட்ரி... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தீா்ப்பு வரவேற்கத்தக்கது: அன்புமணி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீா்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். பாமக நடத்திய சித்திரை முழுநிலவு வன்னியா் மாநாட்டில் பங்கேற்க சென்றபோது வேன் கவிழ்ந்து உய... மேலும் பார்க்க

உயிரிழந்தவா் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிதி: அன்புமணி ராமதாஸ் வழங்கினாா்

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்திற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினாா். சீா்காழி அருகே மருவத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (மே 15) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுது... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜமாபந்தி நிறைவு

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், மயிலாடுத... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வருக்கு கடிதம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக நிரந்தர கட்டடப் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, முதல்வருக்கு அகில பாரத இந்து மகா சபா கட்சியி... மேலும் பார்க்க