செய்திகள் :

மீன் வளா்ப்பு திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

post image

பிரதமரின் மீன்வள மேம்பாடுத் திட்டத்தின்கீழ் மீன் வளா்க்க விரும்புவோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கொல்லைப்புற மற்றும் புறக்கடை அலங்கார மீன்கள் வளா்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் மகளிா் பிரிவில் பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். பயனாளிகளுக்கு 1-அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3 லட்சத்தில் 60 சதவீதம் மானியமாக ரூ.1.80 லட்சம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ளவா்கள் 15 நாள்களுக்குள் திருச்சி மற்றும் கரூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மூப்புநிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவாா்கள்.

திட்டங்களில் பயன்பெற விரும்புவோா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஒருங்கிணைந்த மீன்வள அலுவலக வளாகம் - தரை தளம், கொட்டப்பட்டு, திருச்சி-620 023 என்ற முகவரியில் இயங்கி வரும் திருச்சி மற்றும் கரூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 0431 - 2421173 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இந்தத் தகவலை ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க